Saturday, 23 April 2016

காதல் கவிதைகள் நீ !


Chapter 12


..............................ஆமாம் , டி தான் , இப்பொழுது கிளம்புங்கள் மேடம் என்று ஒருவழியாக அவளை வெளியே அனுப்பிவிட்டு , தன் சீட்டில் அமந்தவனுக்கு , என்னடா கீர்த்தி , இவள் இப்படியே இன்னும் 2முறை நேரில் வந்துவிட்டு போனால் என்றால் , ஒருவாரம் கூட தாக்கு பிடிக்கமாட்டேன் போலயே என்று இறுதியில்  ஒரு முடிவிற்கு வந்தவனாக தன்னுடைய பள்ளி தோழிக்கு கால் செய்தான்.

ஹலோ பவித்ரா , நான் கீர்த்தி பேசுகிறேன், 

ஹாய் டா கீர்த்தி , வாட் அ ப்ளசன்ட் சர்ப்ர்ரைஸ் , ஹவ் ஆர் யூ மேன்  , இப்பதான் சார்க்கு எங்களுடைய நியாபகமே வருதா , கடைசியாக திருமணத்தில் பார்த்தது , எனக்கு ஒரு கால் செய்ய வேண்டும் என்று கூட உனக்கு எண்ணம் வரவில்லை பார்த்தியா என்று அவள் வழவத்து கொண்டே போக , 

ஹே டபரா செட் , என்னை பேசவே விடமாட்டியா நீ , உன்னையெல்லாம் பாவம் அந்த மனுஷன் பிரதீப் எப்படி தான் அட்ஜஸ்ட் பண்றாங்க , ஒன்றும் புரியவில்லை போ , 

டேய் , போதும் இப்பொழுது விஷயம் இல்லாமல் நீ கால் செய்து இருக்க வாய்ப்பில்லை , சரி சொல்லு என்னவென்று , 

அப்பாடா , ஒருவழியாக பேசவிட்டாள் , ரொம்பவும் நல்லது , சரி உனக்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம் , அதற்குள் நீ உன் மணவாளருடன் இங்கு வரவேண்டும் , நீ வந்து செய்ய வேண்டிய விசயங்கள் பல உள்ளது , ஸோ நைநை என்று பேசிகொண்டே இல்லாமல் கிளம்பும் வழியை பாரும் , புரிந்ததோ என அவன் கேலியாக கூறி முடிக்க , 

அதெல்லாம் முடியாது , நீ என்ன காரணம் என்று கூறாமல் வரமுடியாது சார் , பர்ஸ்ட் சொல்லுங்க , அப்புறம் யோசிக்கலாம் , 

அடிப்பாவி , இது என்னுடைய வாழ்வு பிரச்சினை நீ என்னவென்றால் வரமுடியாது சொல்கிறாய்  , சரி நன்றாக   கேட்டுகொள் , ஐயாவுடைய திருமணம் பற்றியது , புரிந்ததா , 

வாவ் , சூப்பர் கீர்த்தி , ஆமா லாஸ்ட் டைம் என் திருமணத்திற்கு வந்த பொழுது ஏதோ காஞ்சனாவோ   இல்லை கல்பனாவோ ,  ஏதோ சொன்னமாதிரி இருந்ததே அவள் என்ன ஆனால் , அவ்வளவு தானா , பாவம் இல்லையா அந்த பொண்ணு  என்று அகைன் தொடங்க , 

ஹே வாயாடி , அவள் பெயரினை  இப்படி கொலை செய்யுரியே , காஞ்சனாவும் இல்லை , கல்பனாவும் இல்லை , கவிதா என்னுடைய கவி செல்லகுட்டி போதுமா , 

ஐயோ , போனிலேயே வழிகிறது கீர்த்தி , கொஞ்சம் துடைத்து கொள் , சரி இப்பொழுது நான் உடனடியாக அவளிடம் பேசவேண்டுமே , எங்கே போன் நம்பர் முதலில் சொல் , என தொடங்க 

ஹ்ம்ம்க்கும் , நானே இங்க பேசுறது இல்லையாம் , இதில் இவள் வேறு , இங்க பாரு ப்ரொப்லெம்மே அங்க தான் , நீ பர்ஸ்ட் போனில் கத்தி கொண்டே இல்லாமல் இங்க கிளம்பி முதலில் வா , பிறகு நான் விவரம் சொல்றேன் , இப்பொழுது நிறைய வேலை இருக்கு , ஸோ நீ தனியே கத்தி கொண்டே இருப்பியாம் நான் கால் கட் செய்ய போறேனாம் ஓகே  , என்று அவளுக்கு பதில் கூறிவிட்டு அடுத்து ஒரு முடிவுக்கு வந்தவனாக  கவிதாவின் தந்தைக்கு கால் செய்ய நம்பர் டைப் செய்தான்.

இங்கே கவிதவிற்கோ , வேளையில் கூட கவனம் செல்லவில்லை , ச்ச எப்படி ஒரு காரியத்தை முட்டாள் தனமாக செய்து இருக்கிறேன் , கீர்த்தி கோபபடுவதில் தவறு ஒன்றுமே இல்லை , என்னை சொல்ல வேண்டும் , எல்லாம் என் விதி , இதில் யாரையும் குறை சொல்லமுடியாது என்று ஒரு வித அலுப்புடனே ஆபீஸ் வொர்க் பார்த்தவள் அதற்கு மேல் முடியாமல் போக பர்மிசன் வாங்கி கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள். 

அடடா வா கவி , என்னடா இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் போலயே என்று கேட்ட அம்மாவிடம் , அது ஒன்றும் இல்லைம்மா கொஞ்சம் லேசாக தலைவலி அதான் என்று
சமாளித்த மகளினை , என்னடா இப்பொழுதெல்லாம் அடிக்கடி தலை வலி வர மாதிரி இருக்கேடா , என்று கூறிவிட்டு அவள் சின்ன புன்னகை செய்ய , 

அம்மா , ஏன் இப்படி , பொண்ணு தலைவலி சொன்னால் விழுந்து விழுந்து கவனிப்பீர்கள் , இப்ப என்னவென்றால் சிரித்து கொண்டு நிற்கிறீர்கள் என்னம்மா , அப்பா வரட்டும் அப்பொழுது பார்த்து கொள்கிறேன் உங்களை என்று திரும்ப நடேசன்  உள்ளே வர சரியாக இருந்தது . 

அப்பா , பாருங்க அம்மா இப்படிஎன்று அவள் மூச்சு விடாமல்  முழுவிவரத்தையும் சொல்ல , அவரும் அவளை பார்த்து புன்னகைத்து வைத்தார் , என்னப்பா நீங்களுமா , போங்கள் நான் போறேன் என்று கோபித்து கொண்டு திரும்பியவளை அது இல்லைடா கண்ணு , இப்பொழுது அம்மாவை பகைத்து கொண்டால் அடுத்து நைட் சாப்பாடு என்ன செய்வது அதான் என்று மகளை சமாளித்து கொண்டே லட்சுமியை பார்த்து இருவரும் கவியை பார்த்து சிரித்தனர். 

என்னவோ இதில் இருக்கிறது என மனதில் எண்ணி கொண்டே , சரிப்பா நான் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க போகிறேன் , பிறகு பேசலாம் என தன் அறைக்குள்  வந்தவளுக்கு 
அப்படி என்னதான் நடந்து இருக்கும் , அவள் யோசித்து கொண்டே படுக்கையில் விழ , என்னவோ கத்திரிக்காய் மலிந்தால் கடைத்தெருவுக்கு வராமலா போய்விடும் அப்பொழுது பார்த்து கொள்ள வேண்டியது தான் , நமக்குதான் கீர்த்தியை சரி செய்ய கூட முடியாத அளவு தலைக்கு மேல் வேலை இருக்கு , இதில் இதை வேற யோசிப்பானேன்  என்று மனதினை அமைதி படுத்தி கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள். 

அங்கே வெளியே , என்னங்க நீங்கள் போனில் கூறிய அனைத்துமே உண்மை தானா , ஆனால் அப்பொழுதே நினைத்தேன் இந்த மாதிரி எதையாவது மனதில் வைத்து கொண்டு தான் இவள் தள்ளி போடுவாள் என்று எப்படியோ ஒரு வழியாக அந்த தம்பியே ஒத்து கொண்டதே ரொம்பவும் நல்லது என்று பேசிய மனைவியிடம் , 

இன்னும் என்ன தம்பி ,  மாப்பிள்ளை என்றே கூறலாம் , தங்கமான பிள்ளை என்னிடம் எவ்வளவு தெளிவாக பேசினான் தெரியுமா , அனைத்து விவரங்களையும் மரியாதையாக பேசிய விதத்தில் நாமே பார்த்து இருந்தால் கூட இப்படி ஒரு பையனை பார்த்து இருப்போமா என்று தெரியவில்லை லட்சுமி , என்னவோ பாவம் பிள்ளைகள் இவ்வளவு காலம் பிரிந்து இருந்ததே போதும் , உடனே பேசி முடிக்க வேண்டியது தான் 
நமது வேலை ,

என்னங்க , எதற்கும் மாப்பிளையின் வேலை , குடும்பம் ஒரு முறை விசாரிக்க வேண்டும் அல்லவா , 

இதெல்லாமா நீ கூறவேண்டும் , அதெல்லாம் அந்த தம்பி கிளம்பிய அடுத்த ஒருமணி நேரத்தில் நான் விசாரித்து விட்டாகியது , எந்த பிரச்சினையும் இல்லை , நீயாக கவியிடம் இப்பொழுது ஏதும் கூறவேண்டாம் புரிந்ததா ,

சரிங்க நான் பார்த்து கொள்கிறேன் , அவர்கள் எப்பொழுது வீட்டிற்கு வருவார்களாம் , என்று அவள் துவங்க 

நாளை அல்லது அதற்கும் மறுநாள் , நீ எதற்கும் இப்பொழுதே ஏற்பாடு வேலைகளை பார்க்க துவங்கி விடு என்று தங்கள் ஆசை மகளின் திருமணத்திற்கு வேண்டியவற்றை செய்ய ஆரம்பித்தனர். 

கீர்த்தி வீட்டிலோ  என்ன தரகரே , பையனுக்கு பொண்ணு பாருங்கள் என்று கூறி மாதகணக்கில் ஆகிவிட்டது , நீங்கள் ஒன்றும் காட்டிய பாடில்லை , 

அது  இல்லைம்மா , நல்ல வரனாக வர வேண்டாமா அதான் , இப்பொழுது பாருங்கள் எல்லாம் டாக்டர் வரன்லாம் இருக்கு , நீங்கள் பார்த்து ஓகே சொன்னால் போதும் உடனே பேசிவிட வேண்டியது தான் , என்று போட்டோக்களை காட்ட , அதில் கவிதாவின் போட்டோ இருக்க , அந்த தாய்க்கோ மிகவும் சந்தோசம் ஆகிவிட்டது , 

தரகரே , இந்த பொண்ணுதான் கண்டிப்பாக நம்ம வாசுவிற்கு சரியான ஜோடி , நீங்கள் உடனே பேசி விடுங்கள் என்றவளிடம் , ஐயோ சாரிம்மா , இந்த பொண்ணு போட்டோ இதில் எப்படி கலந்தது என்று தெரியவில்லை , இவர்கள் நம்மளுடைய ஆட்கள் இல்லை , சாரிம்மா மன்னித்து கொள்ளுங்கள் , நீங்க வேற பாருங்கள் என்றவரிடம் , 

அதெல்லாம் ஒன்றும் தேவைஇல்லை , ஜாதி என்ன பெரியதா , அனைவரும் மனித ஜாதி தான் , அந்த பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா , எங்கள் வீட்டுக்கு ஏற்ற மருமகள் இவளே தான் , புரிந்ததா  நீங்கள் அவர்களிடம் சம்மதம் கேட்டு விட்டு வாருங்கள் , இப்பொழுது கிளம்புங்கள் என்று முடித்து விட்டாள். 

அங்கோ,  அப்பாடா ஒருவழியாக கவிதாவின் அப்பாவிடம் பேசியது போல் , அம்மாவிடவும் சொல்லிவிட வேண்டியது தான் என ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தவனை தாண்டி தரகர் செல்வதை கவனித்து கொண்டே உள்ளே வந்தவனை 

வா வா கீர்த்தி , நல்ல நேரத்தில் தான் வந்திருக்கிறாய் , உனக்கு ஏற்ற மாதிரி பொண்ணு பார்த்து இருக்கிறேன் என்று அவள் துவங்க , அம்மா நான்தான் எனக்கு டைம் கொடுங்கள் என்று கூறினேனே அதற்குள் , நானாக போகவில்லை வாசு , நம் தரகர் முன்னாடி கொடுத்ததை கொண்டு வந்து இருக்கிறார் , பட் நான் உனக்கு பார்த்திருக்கும் பெண்ணை பார்த்தால் நீ வேண்டாம் என்று யோசிக்க கூட மாட்டாய் , அப்படி ஒரு அழகு , அறிவு , தைரியம் எல்லாமே....

அம்மா போதும் போதும் , அந்த பெண்ணை பற்றி எனக்கு என்ன வந்தது , விடுங்கள் இந்த பேச்சினை,

சரி, வாசு நீ வீட்டிற்குள் வந்த வேகத்தினை பார்த்தால் ஏதோ முக்கியமாக பேச வந்தது போல் இருந்ததே , சொல்லுடா என்ன அது , 

ஹ்ம்ம் , முக்கியமான விசயமே தான் , வந்து...அது வந்து....

அடடா , என் மகன் வாசுதானா இது பேசுவதற்கு யோசிக்கிறான் நம்பவே முடியவில்லை , 

அம்மா , நீங்கள் வேறு , சரி நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று...

அப்பாடா இப்பொழுதாவது இந்த எண்ணம் வந்ததே மிகவும் சந்தோசம் , சரி அடுத்து பொண்ணு யாருன்னு சொல்றியா 

அம்மா, அது வந்து அன்று நம் வீட்டிற்கு கூட நீங்கள் அழைத்து வந்திர்களே , கவிதா...

சொல்லு கீர்த்தி , அந்த பொண்ணை தான் நானும் அவர்கள் வீட்டில் பேசிவிட்டு கூறுங்கள் என்று தரகரிடம் கூறி அனுப்பினேனே , அவளுக்கு என்ன சொல்லு...

அம்மா , ரொம்ப சந்தோசம் , ஒரு வழியாக நீங்களாகவே நல்ல முடிவு தான் கொண்டு வந்து இருக்கீங்க , ஸோ ஹாப்பி , அவளை தான் நானும் மனைவியாக இவ்வளவு நாட்களும் என் மனதில் வைத்து இருக்கிறேன் , நான் கல்லுரி தினங்களில் உங்களிடம் கூறியதும் இவளை பற்றி தான்ம்மா , 

அப்படியா ரொம்ப நல்லது  வாசு , நல்ல பெண்ணாக தான் பார்த்து இருக்கிறாய் , நீ பாட்டுக்கு கழுதை மாதிரி எதையாவது கூட்டி வந்து விடுவாயோ என பயந்து கொண்டே இருந்தேன், அது மட்டும்  இல்லாமல் , அவள் அன்று வீட்டிற்கு வந்த பொழுதே இருவரும் முதல் பார்வையிலே அதிர்ந்து நின்றதும்   , என் பெயரை நான் கூறாமல் அவளே கூறியது , இருவரும் மாற்றி மாற்றி ஏக்கமாக பார்த்து கொண்டது இதையெல்லாம் அன்றே கவனித்த பொழுது ஏதும் இருக்குமா என்று கூட நினைத்தேன் , இறுதியில் அது தான் உண்மை என்றாகிவிட்டது , நல்லது , சரி அப்பாவிடம் நான் பேசிவிட்டு அவர்கள் வீட்டிற்கு நாளைக்கே சென்று விடவேண்டியது தான். ஏதோ இப்பொழுதாவது ஒரு முடிவிற்கு வந்தியே சந்தோசம் வாசு ,சரி அவர்கள் நம்பர் சொல்லு என்று குதுகலமாக  கூறியவளிடம், 

அந்த கவலை உங்களுக்கு எதற்கும்மா , நானே அவளுடைய தந்தையிடம் அனைத்தையும் விவரமாக கூறிவிட்டேன் , நாளை நாம் சென்று நேரில் பார்த்து திருமண தேதி குறிப்பது தான் பாக்கி என்று துள்ளலுடன் கூறிய மகனை பார்த்து , சிரித்து கொண்டே இப்பொழுது தான் வாசு மனசுக்கு நிம்மதியாக இருக்கு , உன் வாழ்நாள் முழுவதும் நீ இப்படி சிரித்து கொண்டிருந்தாலே போதும் டா , சரி சரி சின்ன பையன் நீ என்ன விவரம் சொன்னியோ , நான் ஒருமுறை என் சம்பந்தியிடம் பேசிவிடுவது தான் நல்லது , நீ சென்று சாப்பிடு என்று கூறிவிட்டு தன் வேலைகளை சுறுசுறுப்பாக பார்க்க சென்ற தாயை பார்த்து, அம்மாவையும் இவ்வளவு நாள்  கஷ்டபடுத்தி இருக்கிறோமே  , என்று மனதில் நினைத்து கொண்டே சாப்பிட்டு விட்டு வந்து கட்டிலில் விழுந்தான்.

மேஜையில் கவிதா போட்டோவை பார்த்தவனுக்கு மனம் எங்கேயோ தாவியது, இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு இதே வீட்டில் இதே கட்டிலில் அவளுடன் நான்  என்று நினைத்து பார்க்கவே இன்பமாக இருந்தது , 

மணி 8.30தான் ஆகுது , சரி கவி டியர் என்ன செய்றான்னு தெரிஞ்சா நல்லா இருக்குமே, காலையில் கூட வருத்ததுடன் சென்றாலே  பாவம் சரி என்ன செய்யலாம் என்று யோசித்தவன் , ஐடியா வந்தவனாக அவளுக்கு கால் செய்தான் . 

கட்டிலில் படுத்து யோசித்துக்கொண்டு இருந்த கவிதா , போன் சத்தம் கேட்க , யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே பார்த்தவளுக்கு கீர்த்தி நம்பர் வரவும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறையாக , ஒரு வேளை  மன்னித்து இருப்பானோ என யோசித்து கொண்டே ஹலோ சொல்ல போனவளை தடுத்தது அவனது குரல். 

ஹாய் , காவியா செல்லம் என்ன செய்ற , மார்னிங்ல இருந்து கால் செய்யவில்லை என்று கோபமாக இருக்கியா , சரி மன்னிச்சுடு குட்டிம்மா , ஸோ அதற்கு தண்டனையாக ஹ்ம்ம்ம்ம்மா , ஹ்ம்ம்ம்ம்ம்மா  இந்த முத்தத்தினை வைத்து கொள் என்று அழுத்தி முத்தமிட்டான். 

இப்போ சொல்லு டியர்  என்ன செய்ற , சாரி டா , மார்னிங் ஒரு பழைய கேஸ் அதான் சொன்னேனே கவிதா , அதான் அவளேதான் வந்து ஒரே தொல்லை , என்னை ஏற்று கொள்ளுங்கள் என்று வீணாக கெஞ்சி என் டைம்யும் சேர்த்து வேஸ்ட் பண்ணிவிட்டாள் அதான் , ஸோ சாரி என்று கூறிவிட்டு மறுபடியும் இப்ப பண்ற கிஸ் உன் லிப்ஸ்காம் ,எங்க காட்டு , ஹ்ம்ம்ம்ம்மா........... ஓகே டா நவ்  உன் லவர்  கீர்த்தியை மன்னித்து நீயும் கிஸ் பண்ணுவியாம் , எங்க பண்ணு ஐ யம் வைடிங்க் டியர் , என்று அவன் கூறி கொண்டே போக , 

அவன் பதித்த முத்தத்தினில் மெய் மறந்து நின்றவள் , ஹலோ நான் கவிதா பேசுகிறேன் என்று மெதுவாக கூறினாள் , 

என்னது , ஹலோ யாரு கவி....கவிதாவா , ஏய் உன்னைய யாரு பேச சொன்னது , நான் என் லவர் காவியாவிற்கு தானே போன் செய்தேன் ,நம்பர் மாற்றி போட்டு விட்டேன் போலயே ,  நீ எப்படி....என்று அவன் கோபத்துடன் வினவ , 

நீங்கள் தான் போன் செய்திர்கள் , நான் யாருன்னு கேட்பதற்குள்ளாகவே நீங்க பாட்டுக்கு என்னனவோ என்று அவள் சிறு வெக்கத்துடன் நிறுத்தி கொள்ள , 

சரி நான் தான் அவள் என்று நினைத்து பேசிக்கொண்டே போனேன் , அட்லீஸ்ட் நீயாவது ஸ்டாப் பண்ணுங்க சொல்லிருக்கலாம் அல்லவா , இதுல நான் செய்த கிஸ் வேற வாங்கிவிட்டு , ச்ச இப்ப நான் என் லவ்வரிடம் என்ன வென்று சொல்வேன் , இங்க பாரு ஒழுங்கா நான் செய்த கிஸ்லாம் திருப்பி கொடுத்து விடு சொல்லிவிட்டேன்....என்று அவன் பதிலுக்கு கேலியாக பேச , 

அவன் கேட்டதன் அர்த்தம் புரிந்த கவிதா , என்னது? என்று சத்தமாக மிரட்டும் தொனியில் கேட்க , அதானே இப்பொழுது மட்டும் தெளிவாக பேசுவடி,  என  மனதில் நினைத்து கொண்டே , எதற்கு இப்பொழுது கத்துகிறாய்  , நான் அகைன் என் டார்லிங் காவியா என்று நினைத்து கேட்டு விட்டேன் போதுமா, நீ பாட்டுக்கு கற்பனை செய்ய வேண்டாம் புரிந்ததா , போனை வை என்று தானும் மிரட்டும் விதமாக வேண்டும் என்றே பேசிவிட்டு கால் கட் செய்தவன் , அப்பாடா எப்படியோ இன்று  கிஸ் பண்ணியாச்சு , இப்போ நிம்மதியாக தூங்கலாமா குட்டிமா என்று அவள் போட்டோவை பார்த்து கண்ணடித்து விட்டு , நாளைய விடியலை நோக்கி உறங்கினான் கீர்த்தி.................................................................................




ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......



Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI

No comments:

Post a Comment