Sunday, 28 February 2016

காதல் கவிதைகள் நீ !




Chapter 5

........................அவனை மோதிய அந்த நொடியில் தன் மனது அதிகமாக படபடத்தது நியாபகம் வந்தது. இது வரையில் தன் வாழ்நாளில் இப்படி ஒரு படபடப்பு வந்ததிலேயே , ஆனாலும் அவள் படித்தது இருபாலர் பள்ளி என்பதால் ஆண் நண்பர்கள் இருந்தாலும் , இன்று கீர்த்தி வாசனை இடித்த பொழுது ஏற்பட்ட உணர்வு தனக்கே புதிதாக இருந்தது. 
எது எப்படியோ காலை அவனுக்கு நன்றி கூறவேண்டும் என்று தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வந்து உறங்கிவிட்டாள் அவள்.

நாட்கள் கடந்திருந்தது, இந்த இடைப்பட்ட தினங்களில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகிஇருந்தனர் . என்னதான் அவளுடன் இயல்பாக பேசினாலும் கூட , மற்ற பெண்களிடம் பேசும் பொழுது இல்லாத தவிப்பு , நெருக்கம் கவியிடம் தோன்றியதை அவன் மனது ஏற்று கொள்ளதான் செய்தது.

கவிதாவிற்கோ , நண்பனாக அவனிடம் பேசினாலும் , ஏனோ அவன் தனக்கு உரியவன் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது . நாம் பாட்டுக்கு அவனை இப்படிஎல்லாம் நினைக்கின்றோமே , அவன் மனதில் நாம் இருக்கிறோமா , இல்லையா என்று கூட தெரியவில்லை . பட் அவன் மற்றவர்களிடம் பேசும் விதமும் தன்னிடம் பேசும் விதமும் அவன் மனதிலும் அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையை அவளுக்கு அளித்தது.

இயல்பாக பேசிகொண்டிருக்கையில்  , அவன் கைகளை தொட நேரிடும் பொழுது மிகவும் தவித்து போவாள் கவிதா , அவனுக்கும் கூட அப்படிதான் இருந்தது. பட் இருவருக்கும் அவர்களுடைய உணர்வுகள் நாளுக்கு நாள் மற்றவரை பற்றி நினைப்பதிலையே அதிகம் இருந்தன .

அன்று ஒருநாள் கூட இயல்பாக பேசிகொண்டிருக்கும் பொழுது , கவிதா அவனிடம் கூறிய விசயத்திற்கு அவன் கூறிய பதில் அவளது  சிவந்த முகத்தினை மேலும்  சிவக்க வைத்தது .

அது இல்லப்பா ,லாஸ்ட் வீக் நம்ம சீனியர்ஸ் 2பேர்  யாரோ,  லவ் பண்ணுகிறார்களாம் , ஏதோ கிளாஸ்ல கிஸ்  அப்படி இப்படின்னு பேசிகிறாங்க ஒன்றும் தெரியவில்லை , பட் அது எப்படி கிளாஸ்ல  ஒரு ஜெனரல் மேனர்ஸ் கூடவா இருக்காது கீர்த்தி.

அப்படி சொல்லமுடியாது கவி , லவ் பண்றவங்க கிஸ்  பண்றது இயல்புதான் , அவங்க விருப்பத்துல நாம தலையிட முடியாது , பட் அவங்க கிளாஸ்ல செய்தது ,மிகவும்  தப்பு அவ்வளவு தான் . ஏன் நீ வெச்சுஇருக்க மல்லி பூவுக்கும், உன் காதோரம் காற்றில் பறக்கும் இந்த முடிக்கும் ,  இந்த ரம்மியமான மாலை நேரத்திற்கும் எனக்கே கூட தான்  உன்னை கிஸ் பண்ணா என்னனு தோணுது, அவர்கள் லவ் வேற பண்றாங்க சொன்ன , இதுல ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லையே கவி ,

ஹ்ம்ம் என்ன சொன்னிங்க , தோணும் நல்லா தோணும் , கன்னத்துல 4அறை கொடுத்தா எல்லாம் தானா போய்விடும் , என்று அவனை இயல்பாகவே சமாளித்தாலும் , அவன் கூறிய வார்த்தைகளில் அவள் செங்கொலுந்தாகி போயிருந்தாள் . 

அவள் கூறியதை கேட்டு , ஐயோ பயமாதான் இருக்கு , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்மா , நீ பாட்டுக்கு இதான் நேரம்னு அறைஞ்சுடாதிங்க , சோ நாம இப்பவே கிளம்புறது நல்லது என்று சிரிப்புடன் கூறிவிட்டு கிளம்பிவிட்டனர் அவர்கள் .

இரவு அவன் கூறிய வார்த்தைகளை நினைத்து பார்த்தவளுக்கு , என்ன ஒரு தைரியம் , எப்படிஎல்லாம் பேசுகிறான் , என்று மனதில்  திட்டினாலும் அவனுடன் அவன் காதலியாக அவன் மனைவியாக வாழ மிகவும் ஆசைப்பட்டது , இருப்பினும்  படிக்குற நேரத்தில் இது தேவை தானா, பொறுமையாக யோசிப்போம் ,  என்று தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வந்து படிப்பினில் கவனத்தை செலுத்தினாள்.

அங்கோ கீர்த்திக்கு அவள் முன்னிலையில்  தன்னையே கட்டுபடுத்த முடியாமல் அவன் பேசியதை நினைத்து ,  எப்படி ஒரு பெண்ணிடம் இவ்வளவு இயல்பாக பேசினோம், நம்மளை பற்றி என்னதான் நினைத்து இருப்பாளோ , என்னடா கீர்த்தி இப்படி ஆகிவிட்டோம் என்று தன்னையே திட்டி கொண்டான்.  பட் அவள் இல்லாமல் வாழமுடியாது, அண்ட் நாம் கூறியதை கேட்டு அவள் வெட்கப்பட்ட விதம் கண்டிப்பாக அவள் மனத்திலும் அவன் இருக்கிறான் என்று தெள்ள தெளிவாக காட்டியது . எது எப்படி இருந்தாலும் முதலில் படித்து நாம் நினைத்தமாதிரி ஒரு கம்பெனியை நிர்வாகம் செய்யவேண்டும், அதன் பிறகு தான் திருமணம் பற்றி யோசிக்க முடியும் என்று தன் மனதினை ஒரு நிலைக்குள் கொண்டு வந்தான்.

முதல் செமெஸ்டர் எக்ஸாம்ஸ் முடிந்து விடுமுறை தினங்களும் முடிந்து அன்று முதல் நாள் வகுப்பிற்கு வந்தவனுக்கு இன்று எப்படியாவது அவளிடம் தன் காதலை சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றியது . இந்த  முடிவு அவன் விடுமுறை நாட்களில் அவளை பார்க்கமுடியாமல் , அவளையே நினைத்து கொண்டிருந்த பொழுது எடுத்தது. லாஸ்ட் எக்ஸாம் அப்ப கூட பார்க்காமல் போய்விட்டாள் ,  அப்படி என்னதான் வொர்க், இருக்கட்டும் இன்று பேசியே ஆகவேண்டும் என தீர்மானித்து இருந்தான் .

கவிதாவிற்கும் இன்று அவனிடம் தன் மனதினை தெளிவு படுத்த வேண்டும், என்று விரைவாக வகுப்பிற்கு வந்து அவனை காணாது போக , அவர்கள் வழக்கமாக பேசும் இடத்திருக்கு விரைந்தாள் . அங்கு அவனுடன் நெருக்கமாக ஒரு பெண்ணை காணவும் மனம் நொந்து போனது அவளுக்கு , ச்ச , நாம் தான் இவனையே நினைகின்றோம் , இவன் பாரு , என்று வந்த கண்ணீரை கட்டுபடுத்தி கொண்டு கிளம்பிவிட்டாள் அவள் .

வழக்கமாக அவளை  பார்க்க காத்திருந்தவனை கலைத்தது சோனியாவின் குரல், ஹாய் கீர்த்தி மாமா , என்ன இங்க தவம் பண்ணி கொண்டிருக்கிங்க, 

ஹாய் சோனியா நீ எப்படி இங்க, வாட்  எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் , எப்படிருக்க நீ!

நான் நல்லா இருக்கேன் மாமா , உங்களைதான் மீட் பண்ணவே முடியவில்லை, அவ்வளவு பிஸி இல்ல மாமா என கேலி செய்தாள் .

ஹே அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, சும்மா தான் , அப்புறம் அம்மா அப்பா எப்படிருக்காங்க , கேட்டதாக சொல்லு ஓகே வா , 

மாமா அதை விடுங்க , நம்ம திருமணம் பற்றி அம்மா , அப்பா பேசுனாங்க , அதை பற்றி ஒன்றுமே தெரியாதவர் போல் இருக்கீங்க , போங்க நீங்க ,

ஏய் என்ன சொல்ற நீ,யாரும் இதைப்பற்றி என்னிடம் கூறவே இல்லையே ,  அண்ட் வெரி சாரி சோனியா , நான் இது வரைக்கும் உன்னை பற்றி அப்படி நினைத்து கூட பார்த்ததில்லை, அண்ட் நான் என் கூட படிக்குற ஒரு பொண்ணை மனதார விரும்புகிறேன், இன்பாக்க்ட் இன்று தான் என் காதலையே அவளிடம் சொல்ல போகிறேன் , பட் நீ இப்படி , ஐ யம் ரியல்லி சாரி சோனியா , மன்னிச்சுடு 

ஒ ஓகே மாமா , அம்மா , அப்பா தான் பேசி கொண்டிருந்தாங்க , அவ்வளவு தான் , நான் வருத்தப்படவில்லை , ஸோ விடுங்க என்று சமாளித்தவள்  , ஓகே மாமா அவர்களை எப்ப இன்ட்ரோ தர போறீங்க , என்று பேச்சினை மாற்றினாள் அவள் 

கண்டிப்பாக ஒரு நாள் கூட்டிட்டு வரேன் , இப்ப மேடம்க்காக தான் வெயிட் செய்றேன்  , பட் ஆளையே காணோம் , சரி வகுப்பிற்கு டைம் ஆகிவிட்டது , நாம் இன்னொரு நாள் மீட் பண்ணலாம் சோனியா 

ஓகே மாமா  சி யு லேட்டர் , என்று கிளம்பிவிட்டாள் அவள் .

எங்க தான் போய் இருப்பா இவ , ஆளையே காணோம் , கிளாஸ் சென்று பார்க்கலாம் என்று விரைந்தவன் , வகுப்பறையில் அமைதியான முகத்துடன் கவிதா வினை கண்டவனுக்கு அப்பாடா என்று இருந்தது. வகுப்பு துவங்கி இருக்க மே ஐ கம் இன் மேம் என்று கேட்டு விட்டு தன்னிடத்தில் அமர்ந்த பொழுதும் கூட கவிதா தன்னை மட்டும் அல்ல , கிளாஸ் கூட கவனிக்காமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது , அப்படி என்னதான் ஆகிருக்கும் இவளுக்கு என்று பிரேக் வரும் வரையில் காத்திருந்தான்.

வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்ப , ஹே கவி ப்ளீஸ் நில்லு என்று ஒரு வழியாக அவளை தடுத்து நிறுத்தினான் அவன் கீர்த்திவாசன் .

என்ன வேண்டும் உங்களுக்கு இப்ப 

நான் கேட்குற எல்லாத்தையும் உன்னால இப்ப தரமுடியாது என்று அவள் உதட்டினை பார்த்து அவன் பேச , ப்பச் என்ன வேணும்னு சீரியஸ்சா கேட்கிறேன் , சொல்றதுன்னா சொல்லுங்க , இல்லை என்றால் எனக்கு நிறைய வொர்க் இருக்கு என்று கிளம்ப போனவளை கையினை பிடித்து நிறுத்தினான் கீர்த்தி . 

என்ன இது , ப்ளீஸ் கையை விடுங்க , யாரவது பார்த்தால் என்ன நினைப்பாங்க , 

என்ன வேணாலும் நினைக்கட்டும் , எனக்கு பிடித்த பொண்ணு கூட நான் நிற்கிறேன் இதுல உங்களுக்கு என்ன ப்ரோப்ளம்னு கேட்கிறேன்.

ஒ!, இங்க கிளாஸ்ல பேச நான் , அப்புறம் பார்க்ல பேச இன்னொரு பொண்ணா , ரொம்ப நல்லா இருக்கு கீர்த்தி விடுங்க ப்ளீஸ் 

என்னது இன்னொரு பொண்ணா , யார் அது என்று யோசித்தவனுக்கு , ஓ சோனியாவை பார்த்துட்டு பேசறா  போல , ஏய் கவி லூசு அவள் என்னோட அத்தை பொண்ணுடி, அதான் மேடம்க்கு கோபமா  என்று முதல் முறையாக டி போட்டு உரிமையாக அழைத்தான் அவன்.

என்னது டீயா , இங்க பாருங்க இப்படிலாம் பேசாதிங்க , யாரவது கேட்டா தப்பாக பேசுவாங்க , 

ஏன் யார் என்ன பேசுவா , என் லவ்வரை  நான் கூப்பிடுறேன் , இதுல யார்க்கு என்ன ப்ரோப்லம் சொல்லு , 

அவள் என்னது லவ்வரா என்று கேட்டு கொண்டிருக்கும் பொழுதே, பட்  கோபப்படும் பொழுது ரொம்பவும் அழகா இருக்க நீ! ப்ராமிஸ் என்னால கண்ட்ரோல் பண்ண முடியவில்லை கவி என்று  , அவளை பிடித்து ஒரு நிமிடம் இறுக அணைத்து , ஐ லவ் யு கவி , லவ் யு சோ மச் டி , என்று தன் காதலை அவளுக்கு தெரிவித்தான்.

அவனுடைய அணைப்பில் மெய் மறந்தவளை , ஒரு நிமிடத்திற்கு பிறகு விடுவித்தான் அவன், இப்போ நீ சொல்லு நீயும் என்னை காதலிக்குற தானே , என்று அவள் முகத்தினை தன்  கைகளில் ஏந்தி கொண்டு வினவினான்  அவன் கீர்த்திவாசன்,  அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது................


ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
 ,

இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI











Saturday, 20 February 2016

காதல் கவிதைகள் நீ !





Chapter 4

....................அதான் தெரியவில்ல்லை டா , பட் மெரூன் கலரில் பட்டு ஜரிகை புடவையில் அழகுதேவதையாக கோபமாக பார்த்தா டா , கவனிக்காம வந்து மோதிட்டு திட்டு வேறையானு பேசிட்டேன் , ஆனால்  அவள் முகத்தை பார்த்த பிறகு கோபபட முடியவில்லை டா , அப்படி ஒரு மென்மையான பார்வை டா , நோ சான்ஸ் மச்சி அதான் யாரா இருக்கும்ன்னு யோசிச்சேன் டா , சரி வா பார்த்துக்கலாம் , என்று தன் ஆர்கனைசிங் வொர்க் பார்க்க சென்று விட்டான் அவன்.

அங்கு விழா ஆரம்பித்திருந்தது.

டேய் எங்க இருந்திங்க ரெண்டு பேரும் , இங்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க பாரு என்ற அருளின் கேள்விக்கு ,

இல்லை மச்சான்  , அங்கே நம்ம கீர்த்திக்கு ரொம்ப முக்கியமான  வொர்க் , அது வந்து ஒரு பொண்ணு  இவனை என்று இழுக்க.. , டேய் போதும் என்று கீர்த்தி கண்களால் கண்ணனை  சைகை செய்தான்.

ஹ்ம்ம் இல்ல அருள் , கொஞ்சம் லேட் , பட்  இன்ட்ரோ தரேன்னு ஒன் ஹவர் பேசுவாங்களே எல்லாம் ஓவரா அப்பாடா தப்பிச்சோம் நாம , தாங்க் காட் , என்ற கண்ணனின் பதிலில் வந்த சிரிப்பினை அடக்கி கொண்டான் கீர்த்தி வாசன்.

டேய் இந்த இயர் நம்ம சீனியர்ஸ் எப்படி செய்றாங்கன்னு பார்த்தா தான் நெக்ஸ்ட் இயர் நாம பண்ணமுடியும் சரியா என்று  அருள் கூற 

ஆமா கண்ணா அமைதியாக இருடா , நெக்ஸ்ட் என்னன்னு பார்க்கலாம்.

ஓகே கீர்த்தி , அப்படியே உன் ஆள் எங்கன்னு பாருடா , என்று கீர்த்தியின் காதை கடித்தான் கண்ணன்.

டேய் யாருன்னே தெரியவில்லை , அதுக்குள்ள ஆளா !, ஒழுங்கா ப்ரோக்ராம் பார்க்க விடு , அமைதியா இரு கண்ணா 

ஓகே ஓகே , அங்கே பாரு , நெக்ஸ்ட் நம்ம டிப்பார்ட்மெண்ட் தான் போல டா , பார்க்கலாம் ,நம்ம  கிளாஸ்மேட்ஸ் எப்படி இருக்காங்கன்னு என்று ஒரு வழியாக அமைதியானான் கண்ணன் 

மைக்கில் அடுத்தது கம்ப்யூட்டர் சைன்ஸ் டிப்பார்ட்மெண்ட் பெர்பார்ம்மென்ஸ் என்று அறிவிக்க ,  மேடையில் அவனை மோதியவளை பார்த்தவனுக்கு அட இவளும் நம்ம டிப்பார்ட்மெண்ட் தானா என்று மனதிற்குள் சிரித்து கொண்டான் கீர்த்தி வாசன்.

அங்கு மேடையில் குரூப் சாங் அவர்கள் பாடிகொண்டிருக்க , அவன் அவளையே பார்த்து தன் மனதினில் பதித்து கொண்டிருந்தான்.

டேய் கீர்த்தி அங்க பாரு , ஸ்டேஜில் அந்த மெரூன் டிரஸ் தான் உன்னை மோதியவளா என்ற கண்ணனின் குரலில் விழித்து, தெரியாதபோதே இவ்வளவு கேளி  , இன்னும் இவதான்னு சொல்லிவிட்டால் அவ்வளவு தான் , என்று மனதில் நினைத்து கொண்டு ,  இல்ல இல்ல டா , அவங்க இல்லை , கொஞ்சம் அமைதியா இருக்கியா நீ என்று அவனை அடக்கினான் கீர்த்தி.

அடுத்து நாம் தான் . கீர்த்தி , கண்ணா ரெடியா இருங்க என்று அருள் கூற , தன் மனதினை அடக்கி கொண்டு , பெர்பார்ம்மென்ஸ்க்கு ரெடி ஆகினான். 

ஓகே பிரண்ட்ஸ் , நெக்ஸ்ட் சேம் டிப்பார்ட்மெண்ட் பாய்ஸ் ப்ரோக்ராம் , என்று அறிவிக்க , வாழ்விற்கு படிப்பு என்பது வெறும் புத்தக அளவில் மட்டும் இல்லாமல் அறிவை வளர்க்கும் விதமாக இருக்கவேண்டும் என்ற கான்செப்ட்ட்டை வலிறுத்தி ப்ளே செய்த மைம் நிகழ்ச்சி , அனைவரையும் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்தது.

மேடையில் அவனை பார்த்தவளுக்கு ஏனோ மனதில் ஒரு இன்பம் பொங்கியது. அவனுடைய ஆக்டிங் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்  கவிதா.

ஹே பார்த்து டி வழியுது, அந்த மெரூன் ஷர்ட் தானே பார்த்துட்டு இருக்கிற  , கொஞ்சம் கேப் விடுறிங்களா மேடம் என்று அவளை இடைமறித்தது ப்ரியாவின் குரல் ,

ஹையோ ஸ்டார்ட் பண்ணிட்டியா நீ!, ப்ளீஸ் டி , நான் எல்லாரையும் தான் பார்க்குறேன் , என்று அவளை ஒருவாறாக அடக்கினாள் கவிதா.

விழாவில் பெஸ்ட் பெர்பார்ம்மென்ஸ் அவார்ட் என்று கீர்த்திவாசனின் டீமிற்கு அறிவிக்க , அவனுடைய பெயரை தனக்குள் பதித்து கொண்டாள் கவிதா.

ஒரு வழியாக ப்ரோக்ராம் முடிந்து கல்லூரியை விட்டு  கிளம்ப 5.30 ஆகிவிட்டது. மழைக்கலாம் என்பதால் கொஞ்சம் இருள் பரவ துவங்கிஇருந்தது. 

ஹே கவி , இதான் லாஸ்ட் பஸ் எனக்கு , பட் உன்னைய இங்கே தனியாக விட்டு போகவும் மனம் வரவில்லை , பேசாம என் கூட வந்துவிடு டுடே என்று கூறியவளை பார்த்து , அதெல்லாம் ஒன்றும் இல்லை , நீ கிளம்பு டி இப்ப , எனக்கு இன்னும் 5நிமிடத்தில் பஸ் வந்துவிடும் , நான் போய்விட்டு போன் பண்றேன் , என்று அவளை பஸ் ஏற்றி விட்டு தனியே நின்றவளுக்கு மனதில் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது.

பஸ் வந்துவிடும் என்று நின்றவளுக்கு அரைமணிநேரம் ஆகியும் வராதது கொஞ்சம் கொஞ்சமாக பயத்தை அதிகம் செய்தது.  நல்லா வேணும் எனக்கு , இவினிங் கூப்பிட வரவா என்று காலையில் கேட்ட தந்தையிடம் கூட , அதெல்லாம் வேண்டாம்ப்பா , நானே வந்துவிடுகிறேன் , தேவைபட்டால் போன் பண்ணுகிறேன் என்று தைரியமாக கூறினேன் அல்லவா இப்பொழுது பட வேண்டியவள் தான் என்று மனதினில் இருந்த பயத்தை கட்டுபடுத்தி கொண்டு தனியே பேசிகொண்டிருந்தாள்.

வேணும்னே இடித்து விட்டு , தவறே செய்யாத மாதிரி தைரியமாக பேசினிங்க , இப்போ உங்களுக்கே பயமா என்றவனின் குரலில் திரும்பியவளுக்கு அங்கே கீர்த்திவாசனை கண்டதும் ஒரு வித சந்தோசமும் , நிம்மதியும் உண்டாகியது. நாம் பயத்துடன் நிற்பது இவனுக்கு எப்படி தெரிந்தது , அனைவருக்கும் தெரிகிற மாறியா  இப்படி நிற்கிறோம் என்று தன்னையே நொந்து கொண்டாள்.

இல்லை அது வந்து... பஸ் வரவில்லை , கூட்டமும் இல்லையா அதான் கொஞ்சம் யோசனையாக இருந்தேன் , அண்ட் சாரி வேணும்னே இடிக்கவில்லை , தெரியாம'தான் , பட் அகைன் சாரி என்று தன் தவறை ஒத்துக்கொண்டாள் அவள்.

ஹ்ம்ம் ஓகே நோ ப்ராப்ளம்  , ஐ  யம்.. என்று தொடங்க போனவனை , கீர்த்தி வாசன் தானே என்று அவளது குரல் இடைமறித்தது . உங்களுக்கு எப்படி என்று அவன் யோசனையாக பார்க்க அதான் ஸ்டேஜ்லையே சொல்லிவிட்டார்களே, என புன்னகைத்தாள் அவள்.

ஒரு கணம் அவளது சிரிப்பினில் தடுமாறியவன் , ஒ ஓகே ஓகே , நீங்க ,

ஐ யம் கவிதா என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டாள் அவள். அண்ட் உங்க மைம் தீம் சூப்பர் , என்று தன் பாராட்டினை தெரிவித்தாள். 

ஹ்ம்ம் எஸ் தாங்க்யூ ,அண்ட் உங்களோட சாங்கூட சூப்பர் , கன்க்ராட்ஸ் என்றவனை பார்த்து , சார் அது குரூப் சாங் , என்று சிரித்தவளிடம் , நான் உங்களை மட்டும் தானே கவனித்தேன் என்று பதில் கூறினான் அவன் ,

 ஹ்ம்ம் சாரி சார் என்ன சொன்னிங்க 

நத்திங் கவிதா, உங்க பஸ் எப்பொழுது வரும் என்று கேட்டேன் ,

ஹ்ம்ம் , தெரியவில்லை , பட் நீங்க எப்ப கிளம்புவீங்க , என்று அவள் பதற்றமாக கேட்க , எனக்கு இங்க பக்கதுல தான் , நீங்க பஸ் ஏறுற வரைக்கும் டைம் இருக்கு போதுமா மேடம் என்று அவன் சிரித்து கொண்டே கூறினான்.

ஹ்ம்ம் ரியலி தாங்க்ஸ் சார். 

ஓகே இனிமே நாம பிரண்ட்ஸ் நமக்குள்ள எதுக்கு இந்த சார் ,மேடம்லாம் , ஜஸ்ட் நேம் சொல்லுங்க போதும் கவிதா ஓகே வா, என்று அவர்கள் பேசிகொண்டிருக்க மணி 7.30 தொட்டுஇருந்தது.

ஒருவழியாக அவளது பஸ் வந்துவிட அவனிடம் நன்றி கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் அவள். அன்று இரவு வீட்டிற்கு வந்தவனுக்கு அவளது நினைவுகளே அதிகம் இருந்தது. தன்னுடைய மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என்று இந்த நாள் வரை தான் கண்ட கனவுகள் அவள் மூலமாக நேரில் வந்தது போல் இருந்தது. 

அவளுடைய கண்கள் , அதிர்ந்து பேசாதவண்ணம் அவள் பேச்சு , அவளுடைய நீளமான கூந்தல், அந்த அழகான சிரிப்பு , அவள் பேசும்பொழுது அழகாக அசைந்த அவளது  காதணி என்று ஒவ்வொன்றுமே அவனுக்காகவே அவள் பிறந்திருகிறாளோ என்று என்ன வைத்தது .

பார்த்த ஒரு நாளில் லவ்வா , டேய் கீர்த்தி இதெல்லாம் ரொம்ப அதிகமாக இருக்கு, அவள் பாட்டுக்கு மாமா பையன் , அத்தை பையன்னு யாரையாவது காட்டினால் அப்புறம் நம் நிலைமை தேவதாஸ் ரேஞ்சுக்கு போய்விடும் , சோ இப்போதைக்கு இதை விட்டுவிட்டு , பொறுமையாக யோசிப்போம்  என்று தன்னையே கேளி செய்து கொண்டு படுக்க சென்றுவிட்டான் அவன்.

அங்கு வீடு வந்து சேர்ந்தவள் , தாய் தந்தையரிடம் பேசி சாப்பிட்டுவிட்டு வந்து படுத்தவளுக்கு இன்று நடந்தவைகள் நியாபகம் வந்தன. ச்சே அவனை போய் வெக்கமே இல்லாம மோதிருக்கோம் ,என்னதான் நினைத்து இருப்பான் நம்மளை பற்றி என்று தன்னையே திட்டி கொண்டாள் . 

அவனை மோதிய அந்த நொடியில் தன் மனது அதிகமாக படபடத்தது நியாபகம் வந்தது. இது வரையில் தன் வாழ்நாளில் இப்படி ஒரு படபடப்பு வந்ததிலேயே , ஆனாலும் அவள் படித்தது இருபாலர் பள்ளி என்பதால் ஆண் நண்பர்கள் இருந்தாலும் , இன்று கீர்த்தி வாசனை இடித்த பொழுது ஏற்பட்ட உணர்வு தனக்கே புதிதாக இருந்தது. 
எது எப்படியோ காலை அவனுக்கு நன்றி கூறவேண்டும் என்று தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வந்து உறங்கிவிட்டாள் அவள்..........




ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
 ,

,

இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI










Sunday, 14 February 2016


காதல் கவிதைகள் நீ !



Chapter 3


................என்னது கிஸ் , ஹக்கா , ச்ச , உங்க பெர்சனல் பற்றி எனக்கு ஒன்றும் இல்லை , நீங்க யோசிச்சு பொறுமையா இவக்கிட்ட என்ன பண்ணேன்னு சொல்லுங்க, இப்ப  நான் கிளம்புகிறேன் bye , என்று ஆத்திரமாக கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் கவிதா.

அவனுடைய அந்த கடைசி வார்த்தைகளில் கண்களில் தேங்கிய கண்ணீரை கட்டுபடுத்திகொண்டு கிளம்பியவளால் ஆபீஸ்சிற்கு இன்று செல்ல முடியும் என்று தோன்றவில்லை. அங்கு சென்று வேதைனையை வெளிகாட்ட முடியாமல் தவிப்பதற்கு பதிலாக வீட்டிற்கு சென்று விடுவது நல்லது என்று அலுவலக தோழியிடம் லீவ் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

என்னடா ஆபீஸ்சிற்கு போகவில்லையா , ஏதும் ப்ராப்ளமா கவிதா , என்னாச்சுடா , என்றவளுக்கு கவிதாவின் முகம் சரிஇல்லை என்று தெளிவாக  காட்டியது

தாயின் குரலில் தன் முகமாற்றத்தை மறைத்து, இல்லைம்மா, பிரண்ட்ஸ் மீட் பண்ணியதில் கொஞ்சம் அசதியா இருக்குதுங்கம்மா, அதான் லீவ் சொல்லிவிட்டு வந்துட்டேன் , நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்ம்மா , 

சரிடா நீ போ , நான் மதிய சாப்பாடு ரெடி செய்து விட்டு எழுப்புகிறேன்டா ,

சரிங்கம்மா , என்று தாயினை  ஓரளவு சமாதானம்  செய்து விட்டு தன் படுக்கையில் வந்து விழுந்தவளுக்கு , அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. இவனை பார்க்க ஆசையாக கிளம்பி சென்றதென்ன , இப்பொழுது அதற்கு மாறாக அவன் பேசிய அந்த வார்த்தைகளை எண்ணி இவ்வாறு அழுவதென்ன என்று  தன்னையே நொந்து கொண்டாள்.

அவனை பிரிந்த அந்த கடைசி நாளில் கூட அவ்வளவு எளிதாக பிரிவு இருக்கும் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்கவில்லை. ஏதோ அவனிடம் விளக்கம் கேட்க வந்தவளிடம் இனியும் உனக்கு புரியவைத்து பயனில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டு கிளம்புவான் என அவள் சற்றும் எதிர்பார்கவில்லை.

அதிலும் இன்று கூட இருவரும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்துஇருந்தது அவர்களுடைய மன ஒற்றுமையை காட்டுவதாக எண்ணி சந்தோசபட்டு கொண்டிருந்தவளை அவன் கடைசியாக பேசிய வார்த்தைகள் மிகவும் துன்புறுத்தியது. எவ்வளவு முயன்றும் கல்லுரி நாட்களுக்கு தன் மனம் செல்வதை கட்டுபடுத்த முடியவில்லை.

அன்று ப்ரெஷ்சர்ஸ் டே , இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் வருட மாணவர்களை வரவேற்கும் நாள். அன்று தான் அவள் முதன்முதலில் அவனை சந்தித்தது. 

ஹே கவி  சீக்கிரம் டி , நமக்கு பிரசென்டேசன்க்கு டைம் ஆகுது ,

ஹ்ம்ம் இதோ பிரியா  ரெடி டி வா கிளம்பலாம் என்று அவசர அவரசரமாக உடைகளை சரிசெய்து கொண்டு ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியில் வந்தவளை எதிர்பார்காத நேரத்தில் நேருக்கு நேர் மோதினான் அவன் கீர்த்திவாசன்.

ஒரு நிமிடம் தடுமாறியவள் , ஹலோ சார் நேரா பார்த்து வரதெரியாதா என்று கோபமாக வினவியவளை . ஹலோ எக்ஸ்கியுஸ் மீ!, நான் சரியாகதான் வருகிறேன் , நீங்க இவ்ளோ பாஸ்ட்ட்டா வந்து மோதிவிட்டு என்னிடமேவா என்று சத்தமாக கூறியவனால் ,அவள் முகம் பதற்றம் அடைவதை பார்த்து விட்டு அமைதியானான். பர்ஸ்ட் வெளியில் பார்த்து நடங்க ஓகே என்று வேகமாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன் .

என்னடி இங்க சத்தம் , ஹே கவி வாட் ஹாப்பெண்ட் டி ,என்று அவளை பிடித்து பிரியா உழுக்க , ஹ்ம்ம் என்னடி கேட்ட என்று நிகழ் காலத்திற்கு வந்தாள் கவிதா . ஹ்ம்ம் சாப்பாட்டுல  சால்ட் போடா வில்லையும் , அதான் உன்னை ஸ்டேஜ்க்கு கூப்பிடுறாங்க போறியா டி என்று கேலியாக வினைவியவளை பார்த்து என்ன என்னைய  கூப்பிடுறாங்களா  , எங்கடி என்று பதற்றமாக கேட்க , பிரியா சிரித்து கொண்டு நிற்பதை பார்த்து போடி உன்னைலாம் அடி என்று விளையாட்டாக கையை தூக்கி மிரட்டினால் கவிதா.

என்னைய அடிக்கிறது இருக்கட்டும் யார்ட்ட  டி பேசிக்கிட்டு இருந்த , சத்தம் கேட்டுச்சே டி,

அது இல்லடி , யாருன்னு தெரியவில்லை , பட் பாஸ்ட்டா மோதிட்டாங்க , அதான் கோபமாக பேசினேன் டி, ஆனால் தப்பு என் மேல தான் டி,அதான்.

என்னது மோதிட்டியா , வாவ் அப்புறம் என்ன டி ஆச்சு அவன் உன்னை அப்படியே பிடிச்சு, ஹ்ம்ம்...

ஹே மாடு , போதும்டி ஸ்டாப் பண்ணிக்கோ , அதெல்லாம் ஒண்ணும் நடக்கவில்லை , அவன் என்னை பார்த்து திட்டிட்டு தான் போறான் ,இப்ப கிளம்புறின்களா மேடம்  ஆளைபாரு உடனே வந்துட்டா , டைம் ஆயிட்டு டி , இப்ப பாஸ்ட்டா வரியா இல்லையா நீ!

ஹே ஓகே ஓகே டி , அவனை அப்புறம் பார்த்துக்கலாம் வா , அங்க நம்ம பிரண்ட்ஸ் வெயிட்டிங் பார் அஸ் ஒன்லி டி , வா என்று கிளம்பி விட்டனர்.

டேய் கீர்த்தி , என்னடா யோசனை பண்ணிட்ருக்க, அங்க பாரு அருள் நமக்காக வெயிட் பண்றான், வா என்ற கண்ணனின் குரலில் விழித்தவன் , இல்லடா கண்ணா இப்ப அங்க ஒரு பொண்ணு யாருன்னு தெரியவில்லை டா  , பட் பாஸ்ட்டா இடிச்சுட்டேன் அதான் , பாவம் திட்டிட்டு வேற வந்துட்டேன் அதான் 

என்னடா பொண்ணா , எப்படி மச்சான் இருந்தாள் , யாருடா அது 

அதான் தெரியவில்ல்லை டா , பட் மெரூன் கலரில் பட்டு ஜரிகை புடவையில் அழகுதேவதையாக கோபமாக பார்த்தா டா , கவனிக்காம வந்து மோதிட்டு திட்டு வேறையானு பேசிட்டேன் , ஆனால்  அவள் முகத்தை பார்த்த பிறகு கோபபட முடியவில்லை டா , அப்படி ஒரு மென்மையான பார்வை டா , நோ சான்ஸ் மச்சி அதான் யாரா இருக்கும்ன்னு யோசிச்சேன் டா , சரி வா பார்த்துக்கலாம் , என்று தன் ஆர்கனைசிங் வொர்க் பார்க்க சென்று விட்டான் அவன்................


ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்டரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க https://www.facebook.com/Kadhal-Kavidhaigal-Nee-1738330329723744/      

Thankyou 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
 ,

,

இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI




Sunday, 7 February 2016

காதல் கவிதைகள் நீ !


Chapter 2

.......சரி என்னவோ , உனக்காக இந்த ஒருமுறை பேசபோகிறேன் , ஆனால் அதற்குமேல் நீ பார்த்து கொள்ளவேண்டியதுதான் என்று அவளிடம் கூறிவிட்டு போன் வைத்தவளுக்கு அவனை எப்படி நாளை சந்திக்க போகிறோம் , எப்படி பேசபோகிறோம், நாளை நாள் எப்படி அமைய போகிறதோ தெரியவில்லை என்று உறங்கிவிட்டாள் அவள்.

அதிகாலையில் விழித்தவளுக்கு , இரவு அவனுடன் பேசிய வார்த்தைகளே மனதில் ஓடிகொண்டிருந்தது. என்னதான் கடந்த 3வருடங்களாக அவனை பிரிந்துவிட்ட போதிலும், அவனை பற்றி எண்ணாத நேரமில்லை. அவனுடன் பழகிய நாட்களை நினைத்து பார்த்தாலும் இறுதியாக அவனுடன் நடந்த பேச்சு வார்த்தையையும் சேர்த்தே நினைவிற்கு வந்தது. 


அன்று இறுதியாக அவன் கேட்ட அந்த வார்த்தைகள் இன்றும் மறக்க இயலவில்லை அவளால். ஆக, உனக்கு என்னிடம் இவ்வளவு தான் நம்பிக்கை அதானே என்று கோபமாக கேட்டவன்  , ஓகே இனி உனக்கு புரியவைத்தும் ஒன்றும் ஆகாது. நாம் பிரிந்துவிடலாம் என்று அவள் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பிவிட்டான் அங்கிருந்து. 


அதன் பிறகு வந்த நாட்கள் மிகவும் வேதனையாக இருந்தது அவளுக்கு. அவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் அவள் பட்டபாடு அவளுக்கு மட்டுமே தெரியும்.ஏதோ தாய் ,தந்தையர் மீது வைத்து இருந்த அளவு கடந்த பாசமே அவளை நடமாட வைத்தது என்று கூட கூறலாம் . இவனால் மட்டும் எவ்வாறு இவ்வளவு இயல்பாக விலகமுடிந்தது  என்று கூட யோசித்து பார்த்துஇருக்கிறாள்  அவள் , சோ நாம் நினைத்த மாறி இவன் டைம் பாஸ்க்கு தான் நம்மிடம் அவ்வாறு பழகி நடித்து  இருப்பானோ என்று தன் மனதை தானே தேற்றிகொள்வாள். எது எப்படி இருந்து இருந்தாலும் அவளால் அவனை மறக்க முடியவில்லை என்பது மட்டுமே உண்மை. 


கடந்த 3வருடங்களாக நடேசன் கொண்டு வந்த வரன்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் உங்களுடன் இருக்க ஆசைபடுகிறேன்  அப்பா, இந்த பையனோட வேலை சரிஇல்லை அது இது என்று ஏதேதோ கூறி சமாளித்து வந்தாள். ஆனால் இதற்கு இது மட்டுமே முடிவாகதே, என்னதான் செய்யபோகிறமோ என்று நினைத்தே பல நாட்கள் தூக்கமின்றி தவித்தும்  இருக்கிறாள் அவள். ஆனால் இது எல்லாமே பெற்றவர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராமல் கவனமாக பார்த்து கொள்வாள்.


இந்த நிலையில் தான் , பாரதி அவனிடம் போய் தனக்காக பேச சொன்னபோது , உதட்டளவில் வேண்டாம் என்று அவளிடம் மறுத்தாலும் , மனது அவனை பார்க்க போகிறோம் என்று மிகவும் சந்தோஷபட்டதை அவளால் உணர முடிந்தது. ச்சே இது மட்டும் அவனுக்கு தெரிந்தால் எவ்வளவு கேவலமாக நினைப்பான் , எப்படியும் அவன் முன்பு மட்டும் காட்டி விட கூடாது என்று உறுதியாக மனதினில் நினைத்து கொண்டே அவனை பார்க்க தயாரானால்.


நீலவண்ண கலரில்  வெள்ளை நிற பூக்கள் தெளித்தது போல் அழகிய  குந்தன் வேலைப்பாடுடன் கூடிய சுரிதாரில் தேவதையாக காட்சி அளித்த்தாள் கவிதா , இடுப்பு வரை நீண்ட கூந்தலை தளர பின்னி ஜாதி 'பூவினை  மாலையாக சூடி , கிளம்பி கீழே வந்தவளை பார்த்த நடேசனுக்கோ அட இது நம்ம பொண்ணு தானா என்று கூட தோன்றியது. ஹே! லக்ஷ்மி இங்கே சீக்கிரம் வந்து உன் பொண்ணை பாரு என்று தன் மனைவியை ஆர்வம் பொங்க அழைத்தார் நடேசன்.


அப்பா ஏன் , நீங்க வேற , காலையிலே கேலி பண்ண நான்தான் கிடைத்தேனா , என்று வெக்கத்துடன் பதில் கூறியவளை விசித்திரமாக நோக்கினா ர் அவர்.
என்ன்னங்க சத்தம் , சமைக்கும் போது கத்தாவிட்டால் என்ன என்று அலுத்து கொண்டு சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தவளுக்கு கவிதாவின் தோற்றம் வியப்பாக இருந்தது. அடடே கண்ணு! என்ன அதிசயம் குந்தன் சுடிதார் , பூ என்று ஒரே அமர்க்களமாக இருக்கிறதே \என்று வினவினாள்  லக்ஷ்மி .

அம்மா நீங்களுமா!, இப்பொழுது தான் அப்பா ஸ்டார்ட் பண்ணாங்க , இப்ப நீங்களா போங்கம்மா என தன் முகமாற்றத்தை மறக்க முயன்றாள் கவிதா.
அட இல்ல கண்ணு இந்த 3 வருடமாக நீ கடமைக்கு கிளம்புகிற மாதிரி இருக்கும் , இன்று தான் காலேஜ் படிக்கும் போது பார்த்த பொண்ணு மாறி பிரகாசமா தோன்றுகிறாய், என்னடா விஷயம் என்று மெய்யான ஆச்சர்யத்துடன்  வினவிய தாயினை பார்த்து முறுவலித்தாள்  கவிதா.

லக்ஷ்மி பேசிட்டே இருக்காம போய் சுற்றிபோடு ,

ஆமாங்க நான் மறந்தே போயிட்டேன் , இதோ 2நிமிஷத்துல வந்துட்டேன் கண்ணு

ச்சே இன்று என்ன இவ்வளவு வித்தியாசம் தெரிகிறதா என மனதுக்குள் நினைத்து கொண்டவள் , இன்று அவனை பார்க்க போகிற காரணத்தினால் பார்த்து பார்த்து கிளம்பியது நியாபகம் வந்தது. இவ்வளவு நாள் வெறும் கடமைக்கு கிளம்பி அவசர அவசரமாக ஆபீஸ்க்கு ஓடியதும்  நினைவிற்கு வந்தது.

என்னடா இன்று சீக்கிரமாக கிளம்புகிறாய் என்ற நடேசனின் குரலில் நினைவிற்கு வந்தவள், இல்லப்பா இன்று பிரண்ட்ஸ் மீட் பண்ணவேண்டும் சோ, பர்மிசன் போட்டு இருக்கேன்பா அதான் ,

அம்மா சீக்கிரம் வாங்க கிளம்பனும் , என்று அவசர அவசரமாக எதையோ உண்டுவிட்டு விரைந்தவளை ஒரு வித ஆச்சர்யத்துடன் பார்த்துகொண்டு இருந்தனர்  அவர்கள் .


அலுவலகம் வந்தவனுக்கு மனதில் ஆர்வம் தொற்றி  கொண்டது இன்றைய  நாளை எண்ணி.

மே ஐ கம் இன் சார்

யா, எஸ் கம் இன் வாசவி

குட்மார்னிங் சார் , இன்றைய வொர்க்ஸ் ஸ்டேட்டேஸ் என்று தொடர போனவளை , இல்ல வாசவி இன்று 10மணிக்கு இம்பார்டன்ட் வொர்க் இருக்கு , சோ மற்ற ப்ளான்ஸ் டைம் சேஞ்ஜ் பண்ணிகோங்க ஓகே . தென் வேற ஏதும் சொல்லணுமா , ஆர் அதர்வைஸ் நீங்க போகலாம்.

சார் கேட்டா தப்பா நினைக்கமாட்டிங்களே, இன்று உங்களுடையபிறந்தநாளா மிகவும் சந்தோசமா ,இருக்கமாறி இருக்கிங்க , இவ்வளவு நாட்களில் நான் இப்படி பார்த்தது இல்லையே அதான் சார் கேட்டேன் சாரி.

ஹ்ம் வாசவி , அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே , நீங்க கிளம்பலாம் என்று புன்னைகயுடன் கூறிவிட்டு தன் லாப்டாப்னில் கவனத்தை பதித்தான்.

இவள் வருகை தன்னை இவ்வளவு பாதிக்கும் என்று அவன் எண்ணவில்லை. அவளை மறந்துவிட்டதாக நினைத்தது எல்லாம் என்னை நானே ஏமாற்றி கொண்டதா என்று தன்னையே கேட்டு கொண்டான் .

ஹலோ சார் , கவிதானு ஒருத்தவங்க மீட் பண்ண வந்து இருக்காங்க ,பட் அப்பாயிண்ட்மெண்ட் ஏதும் வாங்கவில்லை சார் , அதான் ,

நோ மேம் , அவங்களை அனுப்புங்க நான் பார்த்து கொள்கிறேன்

எஸ் ஓகே  சார் , மேம் நீங்க போகலாம்

ஓகே தாங்கக்யூ

மே ஐ  கம் இன்

எஸ் கம் , என்று கூறி நிமிர்ந்து அவளை பார்த்தவனுக்கு இமைகளை கூட சிமிட்ட தோணவில்லை.

நான்  கவி... என்று கூறியும் அவன் பார்வையின் அர்த்தம் அவளை நோக்கியே இருக்கிறது என்று  புரிய  , ஹலோ சாரி என்று சத்தமாக அவளது  குரலில் விழித்தவன் ,  ச்சே ஐ நீட் டு கண்ட்ரோல் மைஸெல்ப் என மனதில் நினைத்து கொண்டு , எஸ் டேக் யுவர் சீட் , மே இ நோ ஹூஸ் திஸ் என்று வேண்டும் என்றே வினவினான்.

ஹலோ என்னை நியாபகம் இல்லையா ,

நான் நியாபகம்வெச்சுக்கிற லெவல்க்கு நீங்க யாருன்னு தெரியவில்லை , ஐ ஹாவ் மோர் வொர்க்ஸ் , சோ பாஸ்ட்டா சொன்னிங்கனா ஈசியா இருக்கும் என்று வேண்டும் என்றே அலட்சியமாக பேசினான்/

ஹ்ம்ம், நான் கவிதா 3இயர்ஸ்க்கு பிபோர் உங்க கிளாஸ்மேட்.

ஓகே , மிஸ்  ..... ஹ்ம்ம் , சாரி மிஸ் ஆர்   மிசஸ் கவிதா ,, அதுக்கு இப்ப என்ன , என்று மிசஸ் என்பதில் அழுத்தம் கொடுத்து பேசியவனை பார்த்து முறைத்து கொண்டே .

,ஹலோ மிஸ் ஒன்லி , உங்கள்கிட்ட என் ப்ர்ண்ட்  பாரதி பற்றி பேசணும்.

உங்களையே யாருன்னு தெரியவில்லை , இதுல உங்க பிரன்ட் பற்றி தெரிஞ்சுகிட்டு நான் என்ன செய்யபோகிறேன்

என்னை பற்றி உங்களுக்கு தெரியனும்னு நான் இங்க வரவில்லை . ஓகே நான் சொல்லவறதை கேக்குற பிளான்ல இருந்தா சொல்லுங்க , பேசலாம் ஆர் எல்ஸ் நான் கிளம்ப வேண்டியது தான் .

ஓகே சொல்லுங்க என்ன அவங்களுக்கு,

ஹ்ம்ம் அவள் உங்களை லவ் பண்ணிட்டு இருக்கா காலேஜ் டேஸ்ல இருந்து,

வாட் ,என அவன் அதிர

இல்ல அவள்  உங்களை லவ் பண்ணிருக்கா காலேஜ் டேஸ்ல , அண்ட் நீங்களும் அவளை லவ் பண்ணமாறி பார்த்து இருக்கீங்க  சோ அதை கன்பார்ம் பண்ண தான் வந்து இருக்கேன் , அவளோதான் சார் விஷயம் , நீங்க எஸ்னு பாஸ்ட்டா சொல்லிட்டீங்கனா நான் கிளம்ப வேண்டியது தான்.

நான் யாரை லவ் பண்ணேன்னு உங்களுக்கு தெரியாதா என்று அவன், அவள் முகத்தினை பார்க்க

இல்ல அது வந்து ,

என்ன சொல்லவேண்டியது தானே உங்க பிரண்ட்ட, அதை விட்டு என்னிடம் கன்போர்ம் பண்ண கிளம்பியாச்சு என திமிறாக அவன் கூறவும் ,

இல்லை , நீங்க லவ் பண்ணவங்ககிட்டயே உண்மையை மறைச்சவங்க , அதை பற்றி கேட்டா , உனக்கு புரியவைக்க முடியாதுன்னு கிளம்பிடுவீங்க , சோ இதே மாறி அவளிடமும் எதும் பன்னிருபிங்கலோன்னு சின்ன டவுட் அவளோதான் சார்

ஏய் , என கோபமாக டேபிளில் கோபத்தை காட்டியவன் , ஹ்ம்ம் எஸ் யூ  ஆர் கரெக்ட் . 10கிஸ் , 20ஹக் அப்படின்னு நிறைய விஷயம் பண்ணிருக்கேன் , பட் அதெல்லாம் உன் ப்ர்ண்ட்ட பண்ண மாறி நியாபகம் இல்லை, சோ எதும் நியாபகம் வந்தால் நான் கால் பண்ணி சொல்கிறேன் இப்ப நீங்க கிளம்பலாம் ஓகே என்று தெனாவட்டாக கூறினான்.

என்னது கிஸ் , ஹக்கா , ச்ச , உங்க பெர்சனல் பற்றி எனக்கு ஒன்றும் இல்லை , நீங்க யோசிச்சு பொறுமையா இவக்கிட்ட என்ன பண்ணேன்னு சொல்லுங்க, இப்ப  நான் கிளம்புகிறேன் bye , என்று ஆத்திரமாக கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் கவிதா......


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
 ,

,

இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI