காதல் கவிதைகள் நீ !
Chapter 16
.......................................சரி நான் உன்னிடம் பேசவேண்டுமே இதைப்பற்றி என்று அவனருகில் இருந்த கட்டிலில் அவளை அமர்த்தியவன் , அவனது அணைப்பினிலே , அன்று நடந்தது என்னவென்றால் என்று தொடங்க ஆரம்பிக்க , வேண்டாம் கீர்த்தி உங்களை நான் முழுவதும் நம்புகிறேன் , ஸோ விளக்கம் கூட தேவையே இல்லை என்று அதை தடுக்க , அப்படி இல்லை கவி , இது என்னோட திருப்திக்காக நான் கூற நினைக்குறேன் ப்ளீஸ் என்று அவளை அமைதியாக்கி தன் விளக்கங்களை கொடுத்தான்.
அன்று அந்தப்பெண் வானதி அவளை நான் அணைக்காத குறையாக கூட்டி சென்றது உண்மை தான் கவி , ஆனால் அவள் அப்பொழுது ட்ரக்ஸ் சாப்பிட்டு முழு போதையில் இருந்தாள் , அதோடு நிற்க கூட முடியாமல் தள்ளாடும் நிலைமை , அண்ட் வசந்த் அவனுக்கு நம்ம தங்கை இப்படி செய்துவிட்டால் என்று கடும் கோபத்தில் அவளை அறைந்தே விட்டான் , தங்கை என்று கூட பாராமல் அவளை அப்படியே விட்டுவிட்டு வா கீர்த்தி என என்னை வேறு தடுத்தான் , நான் தான் விடுடா இதை பற்றி பிறகு விசாரிப்போம் என அவனிடம் சண்டை போட்டு அவளை அழைத்து சென்றது.
அன்று அவள் மட்டும் ட்ரக்ஸ் யூஸ் செய்த விஷயம் மட்டும் கல்லூரியில் தெரிந்து இருந்தால் பாவம் படிப்பும் இழக்க வேண்டி வந்து இருக்கும் பின் அவள் வாழ்கையே வீணாகி இருக்கும் அல்லவா ,அது தான் யார்க்கும் தெரியாதவாறு அப்படி அணைத்து சென்றதே , ஆனால் இதை பற்றி அடுத்த நாள் கண்டிப்பாக உன்னிடம் தெளிவாக கூறிவிட வேண்டும் என்றுதான் நினைத்து இருந்தேன் குட்டிமா,
ஆனால் அன்று வானதியின் டிபார்ட்மெண்ட் எக்ஸாம் வேறு , நான் சென்று பெர்சனலாக ஹெச்ஓடி பார்த்து பேசி சரி செய்யவேண்டும் , மற்றும் அந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் வேறு , ஸோ அன்று அந்த மன நிலையில் உன்னுடன் நின்று கூட பேச தோன்றவில்லை கவி, பட் நீ சந்தேகிப்பதை போல் பேசியது உண்மையில் என்ன இவள் என்று உன் மேல் அதிக கோபத்தை வரவழைத்தது ,
பிறகு அடுத்த இரண்டு நாட்கள் வானதியின் பெற்றவர்களை சரிசெய்து அவள் ட்ரீட்மென்ட்க்கு ஏற்பாடு செய்தோம் கவி , ஒருவழியாக அனைத்து ப்ரோப்லெமும் முடிவிற்கு வர பிறகு தான் நம் பிரிவு நினைவிற்கு வந்தது கவி ,ச்ச இப்படி பேசிவிட்டோமே என்று வருந்தினால் கூட , இன்னொரு மனது இவள் எப்படி என்னை நம்பாமல் யாரோ பேசுவதை கேட்டு வந்து இன்று இப்படி பேசுகிறாள் , இவ்வளவு தான் நாம் கொண்டிருந்த அன்பின் அளவா என ஒரே வெறுப்பாக இருந்தது கவி , நம்பிக்கை இல்லாமல் வாழும் வாழ்வானது நரகத்திற்கு சமம் , ஸோ அதை புரிந்து கொண்டு நீயாக வரவேண்டும் என்றுதான் நான் விலகி இருந்ததே குட்டிமா ,பட் அதற்காக இவ்வளவு காலம் உன்னை பிரிந்து வாழ்ந்தற்கு என்னை மன்னிக்க வேண்டும் டி நீ , ப்ளீஸ் என அவள் கைகளை இறுக பற்றி கொண்டான்.
இல்லை இல்லை கீர்த்தி , நீங்கள் அந்த பெண்ணுக்கு எவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கீர்கள் , அது தெரியாமல் நான் வானதி உங்களுடைய லவர் அது இது என்று கோபப்படுதியது என்னுடைய தவறு கீர்த்தி , ஸோ ப்ளீஸ் சாரி எல்லாம் கேட்கவேண்டாம் என்று தொடரபோனவளை நிறுத்தி ,
சரி இப்பொழுது பவியிடம் பேசும்பொழுது ஏதோ அவனை தப்பாக நினைக்கவில்லை என்றாலும் ,விளக்கம் கூட கேட்காமல்
சந்தேகப்பட்டு , இந்த 3வருடங்களாக அவனை விட்டு தள்ளி இருக்கிறேன் என்று கூறினாயே , அப்படி என்றால்
அன்றுமே நீ என்னை சந்தேகப்படவில்லையா கவி என அவன் அதிர்ச்சியாக வினவ , ஹ்ம்ம்
என்று ஒப்பு கொண்டு தலையைஆட்டினாள் அவள்.
ஐயோ கவி ,என்ன ஏது என்று கூட வினவாமல் அவசரப்பட்டு இந்த 3வருடங்களாக உன்னை பிரிந்து இருந்து மிகவும் கஷ்ட படுத்தி விட்டேனே , எவ்வளவு மெச்சுரிட்டி இல்லாமல் நடந்து கொண்டு இருந்தோம் பாரேன் கவி , என்னை மன்னித்து விடு ப்ளீஸ் என அவன் அதையே மறுபடியும் கூற , போதும் கீர்த்தி என்று அவன் வாயினை தன் கைகளால் மூடினாள் அவள்.
நானும் தானே , பாரதி கூறினால் , யார் யாரோ பேசிகொண்டார்கள் என்று எதையோ நினைத்து கொண்டு உங்களிடம் கோபமாக பேசியது , அப்படி பார்த்தால் நானும் மன்னிப்பு கேட்க வேண்டும் , ஆகையால் இதை விட்டு விடலாமே ப்ளீஸ் என்று கூற ,சரி சரிடா என் குட்டிமா சொல்லி நான் கேட்காமல் போவேனா ,அதை விடவும் இனி வேறு வேலைகள் நிறைய இருக்கிறது கவி சரிதானே என்று அவளை பார்த்து கண் சிமிட்ட அவள் முகம்வெட்கத்தால் சிவந்து போனது.
அப்பாடா என் மனைவி வெட்கப்படும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது பார் , அப்படியே இழுத்து வைத்து என்னவோ செய்யணும் கூட தோன்றுகிறதே , கவி ஒன்று மட்டும் நிச்சயம் , ஒவ்வொரு முறை நீ அழும்பொழுது உன்னை இப்படி தான் சமாதானம் படுத்த வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு கட்டு படுத்தி கொண்டு நிற்பேன் தெரியுமா என்று கூற ,
ஹ்ம்ம் எஸ் எஸ் கீர்த்தி , இன்பாக்ட் இதை எனக்கு புரிய வைத்ததே அத்தை தான் , என்று கூறி புன்னகைக்க , என்னது அம்மாவா என்று அவன் ஆச்சர்யம் காட்டினான் ,
ஆமாம் பின் சார் பாட்டுக்கு அன்று வீட்டிற்க்கு பெண் வந்துவிட்டு எனக்கு விருப்பம் இல்லை , அம்மாவிற்காக தான் என்று கூறினால் பிறகு நான் என்னதான் செய்வது , அதோடு இல்லாமல் அன்று கட்டிபிடித்து முத்தம் வேறு , என்னடா இது இரண்டும் கான்ட்ராடிக்சனா இருக்குதே என்று யோசித்தேன் , பின் தான் அத்தையிடம் இது பற்றி கேட்கலாம் என்று வந்தேன் , அப்பொழுது அவர்கள் தான் இதை தெளிவு படித்தினார்கள் கீர்த்தி , அதன் பின் நாம் பழகிய எல்லாமும் நினைத்து பார்த்தேன் அப்பொழுது தான் எனக்கே அது விளங்கியது , அதோடு அன்று மாலை உங்கள் தோட்டத்தில் நாம் பேசிக்கொண்டு இருந்த பொழுது உங்களை டெஸ்ட் செய்யதான் தீவிரமாக அழுவதை போல் நடித்தேன் நீங்களும் உடனே , கவி அழாதே செல்லம் அப்படி இப்படி என்று என்னுடைய அதே கீர்த்தியாக பேசினீர்களா , அன்று தான் அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது கீர்த்தி.
ஹ்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் , நான் அப்படி அணைத்து சமாதானம் செய்த பொழுது நீ என்னை நிமிர்ந்து உன்னுடைய இந்த அழகான கண்களை விரித்து பார்த்தாயே , அப்பொழுதே புரிந்து கொண்டேன் நீ கண்டுபிடித்து விட்டாய் என அவனும் பதிலுக்கு உரைத்தான்.
சரி கீர்த்தி ஒரு டவுட் , 3வருடங்களுக்கு பிறகு ஒருவேளை நான் பாரதி பற்றி பேசவேண்டும் என்று நேரில் வராமல் இருந்து இருந்தால் நீங்களும் பேசிருக்க மாட்டிர்களோ என்ற கேள்விக்கு அவளது மூக்கின் நுனியை பிடித்து ஆட்டியவன் , அது தான் இல்லைடா , மெச்சுரிட்டி இல்லாமல் பிரிந்தது போதும் , அட்லீஸ்ட் நாம் மீண்டும் இணைவதற்கு முன் நமது வருங்காலம் சேப்டியாக இருக்குமாறு பார்த்து விட்டு அதன்பின் உன் முன்னால் வரவேண்டும் என்று பிளான் செய்தேன் டியர் , அப்பொழுதுதானே நாம் இணைந்த பிறகு முழுநேரமும் உன்னை மட்டுமே பார்த்து கொண்டு உன்னுடன் இப்படி கொஞ்சி கொண்டே நேரத்தை போக்க முடியும் எப்படி உன் கணவன் என்று சொல்வதை கேட்க கேட்க கவிக்கு வெட்கத்தில் முகம் சிவந்து இருவரும் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள் அவள் ,
மீண்டும் அவனே தொடர்ந்து இன்பாக்ட் அடுத்த ஒரு மாதத்திற்குள் நானே உன்னை எப்படியாவது நேரில் வந்து சந்தித்து எதாவது பேசி தொடங்க வேண்டும் என்று தான் காத்திருந்ததே , நல்லவேளை நீயே வந்து என் வேலையை சுலபமாக்கிவிட்டாய் டியர் ,எப்படியோ நம் பிரிவுக்கு காரணமாக இருந்த பாரதியே நாம் மீண்டும் சேரவும் வழி செய்தாலே அது வரை நல்லது இல்லையா என்று ஒருவாராக அனைத்தையும் பற்றி இருவரும் ஒரு தெளிவிற்கு வந்து கொண்டு இருக்க ,
சரி கீர்த்தி ஒரு டவுட் , 3வருடங்களுக்கு பிறகு ஒருவேளை நான் பாரதி பற்றி பேசவேண்டும் என்று நேரில் வராமல் இருந்து இருந்தால் நீங்களும் பேசிருக்க மாட்டிர்களோ என்ற கேள்விக்கு அவளது மூக்கின் நுனியை பிடித்து ஆட்டியவன் , அது தான் இல்லைடா , மெச்சுரிட்டி இல்லாமல் பிரிந்தது போதும் , அட்லீஸ்ட் நாம் மீண்டும் இணைவதற்கு முன் நமது வருங்காலம் சேப்டியாக இருக்குமாறு பார்த்து விட்டு அதன்பின் உன் முன்னால் வரவேண்டும் என்று பிளான் செய்தேன் டியர் , அப்பொழுதுதானே நாம் இணைந்த பிறகு முழுநேரமும் உன்னை மட்டுமே பார்த்து கொண்டு உன்னுடன் இப்படி கொஞ்சி கொண்டே நேரத்தை போக்க முடியும் எப்படி உன் கணவன் என்று சொல்வதை கேட்க கேட்க கவிக்கு வெட்கத்தில் முகம் சிவந்து இருவரும் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள் அவள் ,
மீண்டும் அவனே தொடர்ந்து இன்பாக்ட் அடுத்த ஒரு மாதத்திற்குள் நானே உன்னை எப்படியாவது நேரில் வந்து சந்தித்து எதாவது பேசி தொடங்க வேண்டும் என்று தான் காத்திருந்ததே , நல்லவேளை நீயே வந்து என் வேலையை சுலபமாக்கிவிட்டாய் டியர் ,எப்படியோ நம் பிரிவுக்கு காரணமாக இருந்த பாரதியே நாம் மீண்டும் சேரவும் வழி செய்தாலே அது வரை நல்லது இல்லையா என்று ஒருவாராக அனைத்தையும் பற்றி இருவரும் ஒரு தெளிவிற்கு வந்து கொண்டு இருக்க ,
ஹ்ம்ம்கும்...இங்கே நாங்களும் இருக்கிறோம் என்று தொண்டையை செருமினால் பவித்ரா , அவள் அருகில் அவள் கணவனும் , வந்துட்டாங்கடா என கீர்த்தி நினைக்க , இவர்கள் முன்னாடி இப்படி கட்டி கொண்டு நிற்கிறோமே என்று அவசரமாக விலகினாள் கவிதா .
டேய் போதும் இப்பொழுதே அனைத்தையும் பேசிவிட்டால் பின் திருமணத்திற்கு பிறகு பேச ஒன்றுமே இல்லையே என வருத்தப்பட வேண்டி வரும் கீர்த்தி என்று பவித்ரா கேலி செய்ய,
இந்த பவித்ராவிற்கு ஒன்றுமே தெரியவில்லை , திருமணத்திற்கு பின் பேசுவதற்கு எங்கே நேரம் இருக்க போகிறது என்று கீர்த்தி கவிதாவின் காதில் சத்தமில்லாமல் கூற , அதை கேட்டு ஐயோ கீர்த்தி ப்ளீஸ் என்று வெட்கத்தை கட்டு படுத்தமுடியாமல் முகம் சிவக்க நின்றாள் கவிதா.
கவிதாவின் முக சிவப்பினை கண்டு பவித்ரா , டேய் நீ எதற்கும் தள்ளியே இரு என்று இருவரையும் விலக்கி நிறுத்தி விட்டு ஹீ ஹீ என சிரிக்க , அங்கு சந்தோசம் மட்டுமே நிறைந்து இருந்தது.
அதிகாலை 6மணி..... வேண்டுதலின் படி வயலூர் முருகன் கோவிலில் முகுர்த்தம் , சொந்த பந்தங்கள் நிறைந்து நிற்க , கவிதா மெரூன் கலர் புடைவையில் கற்கள் கோல்டன் கலரில் பதித்திருக்க தோகை விரித்த மயிலினை போல் பெண்மைக்கே உரிய நாணத்துடன் மணப்பெண்ணாக வர , அவளை பார்த்த பார்வையில் இமைகளை கூட அசைக்க தோன்றாமல் தன் பார்வையாலே விழுங்கி கொண்டிருந்தான் மணமகன் கீர்த்தி, இவள் என் மனைவி என்ற பெருமிதத்துடன்.
கெட்டிமேளம் முழங்க , கவிதாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கீர்த்தி பூட்ட , அவர்களது திருமணம் அனைவரது ஆசியுடனும் நடந்தேறியது, அவளது நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட , தன் காதல் நிறைவேறிய திருப்தியில் கவிதாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வர , அதை கவனித்த அவளது கணவன் ஸ்ஸ்... கவி , என்று அடக்கி , அவளது கையை இறுக பற்றிக்கொண்டு அக்னியை வலம் வந்தனர் அந்த மணமக்கள்.
இவர்களது ஜோடி பொறுத்ததிணை பார்த்து வந்த கூட்டம் புகழ்ந்து தள்ள , பெற்றவர்கள் மனதிருப்தியுடன் அவர்களை வாழ்த்தினர். பிரியா , கண்ணன் ,அருள், பாரதி , வானதி , வசந்த், பவித்ரா , பிரபா, என்று அவர்களது நண்பர்கள் வட்டாரம் சூழ்ந்து நின்று அவர்களை கேலி செய்து கொண்டே மனதார வாழ்த்தியது.
அனைத்து பார்மாலிட்டிசும் முடிந்து அன்று இரவு கீர்த்தியின் அறைக்குள் கையில் பால் சொம்புடன் நுழைந்த கவிதாவை , அப்பாடா இனி யாரும் என்னை தடுக்க மாட்டார்கள் என்று அவளை பின்னிலிருந்து இறுக பற்றி கொண்டான் அவளது கணவன்.
கீர்த்தி அதுக்குள்ளவா, உன்னிடம் ஒன்று முக்கியமான சந்தேகம் கேட்க வேண்டும் என்ற மனைவியின் வார்த்தையில், என்னத்தை டி இப்போழுது கேட்க போகிறாய் என்று முகத்தினை பாவமாக வைத்து கொண்டு கீர்த்தி வினவ , அதுவா அது வந்து...வந்து என்று வேண்டும் என்றே அவனை தவிக்க விட்டாள் கவிதா .
அதான் வந்து விட்டாயே சொல்லேன் டி , என்ன வேண்டும் சொல்லு என்று கேட்க , ஹ்ம்ம் வந்து முதலில் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று அப்பாவியாக கேட்க , ஏண்டி மனுசனை வெறுப்பேத்துற அதான் கையில் பால் இருக்கே , அதை குடிக்க வேண்டியது தானே என்று கூற , அட ஆமாம் இல்லை , என்று தானும் குடித்துவிட்டு அவனிடம் நீட்டினாள் கவிதா , அவளை விழுங்கும் பார்வை பார்த்து கொண்டே அதை குடித்தவன் ,
ஹ்ம்ம் இப்போதாவது சொல்லேன் டி என்று கூற , அது வந்து நம்மளோட பிள்ளைகளை எந்த ஸ்கூலில் சேர்ப்பது கீர்த்தி, அதை தான் யோசித்து கொண்டு இருக்கிறேன் என்று அவள் சீரியசாக வினவ , ஹ்ம்ம் ஏன்டி கேட்கமாட்ட , நாம இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் பிள்ளைகள் வானத்தில் இருந்து தான் குதிக்கவேண்டும் என்று அவன் கூறிய பதிலை கேட்டு சிரித்து கொண்டு நின்றவளை பார்த்து , உன்னைலாம் பேசவிட்டதே தப்பு டி என்று அவளது இதழ்களை தனது இதழ்களால் மூடி தன்னுடைய முத்தத்தினை பதிக்க ,அதில் மெய் மறந்து கொஞ்சம் கொஞ்சமாக கவிதா அவனுள் கலந்து கொண்டிருந்தாள்.இருவரும் அவர்களது வாழ்கையை வண்ண கோலமாய் வரைந்து கொண்டிருந்தனர். அவர்களை வாழ்த்தி தென்றல் காற்று காதல் கவிதைகளாக வீச , நாமும் அவர்களை வாழ்த்தலாமே.....
................முற்றும்................
ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி கண்டிப்பாக உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்து இருக்கும் என்று நம்புறேன் , தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட் பிரண்ட்ஸ்...................தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன்............
ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் ஸ்டோரியில் மீட் பண்ணலாம் bye ......
Thankyou
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI