Sunday, 10 April 2016

காதல் கவிதைகள் நீ !



ஹாய் பிரெண்ட்ஸ் இறுதியாக  என்னோட பேஜ்வியுஸ் 1100 வந்ததற்கு நீங்கள் மட்டும் தான் காரணம் , ஸோ தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட்.....தாங்க் யூ ஒன்ஸ் அகைன் பிரெண்ட்ஸ், ......


Chapter 10


...........................................நம் கல்லூரி கடைசி வருடம் அன்று கீர்த்தி பற்றி நான் கூறிய அனைத்துமே பொய் டி , ப்ளீஸ் அவ்வாறு செய்ததற்கு நீ முதலில் என்னை மன்னிக்க வேண்டும்  , பட் அது எல்லாமே பொய் மட்டும்தான் என்று கூற கவிதாவிற்கோ தலையே சுற்றியது மனதினில் கீர்த்தியின் முகம் நியாபகம் வர , என்னது பொய்யா என்னத்தை டி சொல்லி தொலைக்குற முதலில் தெளிவாக சொல்லு  பாரதி .


இல்லை கவி , நான் உன்னிடம் மன்னிப்பு கேட்பதற்காக தான் இப்பொழுது ஃபோன் பண்ணிருக்கேன் டி, முதலில் என்னை மன்னித்து விடு , என வருத்தமான குரலில் பாரதி பேசி கொண்டே போக கவிதாவிற்கோ மூச்சடைத்து போனது .


உன்னிடம் கீர்த்தி பற்றி தவறாக வேண்டும் என்றே கூறியது நான்தான் டி, ஏன் என்றால் கீர்த்தியை நானும் தான் அப்பொழுது காதலித்தேன் , ஆனால் அவனுக்கு என்னமோ பார்வை முழுவதும் உன்னிடம் தான் , பட் என் மனசுக்கு அப்போ அது புரியவில்லை , அதான் அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று எண்ணிவிட்டேன் , அதான் அன்று அவ்வளவு தவறாக அவரை பற்றி கூறினேன் , அப்பொழுது நான் பொறாமையில் செய்த செயலால் இன்று வரை நீ தனியே வாழ்வதற்கு நான் காரணம் ஆகிவிட்டேன் , என்னை மன்னிக்க முடியும் என்றால் தயவு செய்து மன்னித்து விடு ப்ளீஸ் டி,  அவள் பேசிக்கொண்டே போக அதிர்ச்சியில் தொலைபேசியினை நழுவ விட்டு கட்டிலில் விழுந்தவளுக்கு  அன்றைய நாட்கள் மனதிற்குள் வந்தன

அன்று , ஹாய் கீர்த்தி நான் கவி பேசுறேன் , 

சொல்லுங்கள் மேடம் , என்ன காலேஜ் வர ஐடியாவில் மேடம் இல்லையோ, டைம் பார்த்திங்களா இல்லையா , 

இல்லை கீர்த்தி , இன்று நாங்கள் அனைவரும் எங்கள்  குலதெய்வ கோவிலுக்கு போறோம்  , சோ நானும் ப்ரியாவும் வரமாட்டோம்  , அதான் அதை உன்னிடம் சொல்லிவிடலாமே என்று தான் ஃபோன்செய்தேன் , எப்படியும் நான் எப்பொழுது வருவேன் என்றுதானே காத்துகொண்டு இருப்பாய் அதான் , 

அடடா , உனக்காக வெயிட் செய்றேன்னு யார் சொன்னது , எப்படியோ இன்று நீ காலேஜ் வரவில்லை சோ நான் நிம்மதியாக மற்ற பெண்களை சைட் அடிக்கமுடியும் அப்பாடா !, தாங்க் காட் என்று அவன் கேலி செய்ய , 

ஓ அப்படிங்களா சார், நீங்க அப்படியே அங்க பாருங்க , நானும் இங்கே என்னுடைய அத்தை பையனுக்கு ஓகே சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் , சரிதானா மிஸ்டர்கீர்த்தி , என்று அவள்  பதிலுக்கு கேலி செய்ய , ஆளை விடுமா தாயே!, நீ செய்தாலும் செய்வ டி , உன்னையெல்லாம் ஒரு நாள் வரும் அப்ப இழுத்து வைத்து ..... ஹ்ம்ம் என இழுக்க , 

டேய் , நான் போக போவது கோவில் , ஸோ கொஞ்சம் உன்னுடைய இந்த எண்ணங்களை ஒதுக்கிவைத்து விட்டு போய் நல்லா படிக்குறீங்களா சார்  , என்று அவனுக்கு பதில் கூறினாலும் , அவன் கூறியதன் அர்த்தம் அவளை முகம் சிவக்க செய்தது. 

கவி , உன் பின்னாடியே , ஒருத்தன் சுற்றுவது உனக்கு புரியவில்லையா, என அவன் ஏக்கமாக கேட்பது கவிக்கோ புரியாமல் இல்லை, கீர்த்தி , இன்னும் 6 மாதம் தானே  , காலேஜ் முடித்து விட்டு , அடுத்து ஒரு வேலைக்கு சென்றதும், அம்மா, அப்பாவிடம் பெர்மிசன் பெற்று பிறகு  திருமணம் தான் , அதன் பின்....... என்று கூறிக்கொண்டே போனவள் நாக்கை கடித்து கொண்டு அமைதியாகிவிட ,சொல்லு கவி அப்புறம் ஹ்ம்ம்........ என கூற , சார் நான் ஃபோன் வைக்குறேன் இப்பொழுது  பை , என்று அவசரமாக காலை கட் செய்தவள் தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்து கொண்டு நிற்க  , என்னடி பண்ற இன்னும் ரெடி ஆகாமல் , என்ற தாயின் கேள்வியில் விழித்தவள்  இதோ 5மினிட்ஸ்ம்மா வந்து விட்டேன். என்று தன் வேலைகளை பார்க்க துவங்கினாள். 

விடுமுறையில் இருந்த நாளில் நடந்ததாக பாரதி சொன்ன விசயங்களே இன்றைய  பிரிவிற்கு காரணம் என்பது புரியவர , கண் கலங்க படுத்திருந்தவளுக்கு அடுத்த நாள் நினைவுகள் நினைவிற்கு வந்தன. 

அடுத்த நாள் , என்ன இந்த கீர்த்தி , நேற்று இரவு கால் கூட செய்யவில்லை , என்னதான் செய்வானோ , இன்று வகுப்புக்கு வரட்டும் இவனுக்கு இருக்கு என்று மனதினில் சிரித்து கொண்டே அவனுக்காக காத்திருந்த பொழுது  , அங்கு வந்த பாரதி இது' தான் சரியான நேரம் என அவளிடம் தன் முழு பொய் கதையை கூற தொடங்கினாள். 

கவி, நம் கீர்த்தியா இப்படி என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை டி , ச்ச அந்த பொண்ணு நம்ம கீர்த்தியை அவ்வளவு இறுக்கமாக பிடித்து கொண்டு போவதும் , அவளை கீர்த்தி தாங்கி பிடித்து அழைத்து செல்வதும் , நேற்று காலேஜ்கே இவர்கள் செயல் தான் பெரிய என்டேர்டைன்மன்ட் போ , இதெல்லாம் நீ கண்டு கொள்வதே கிடையாதா , என்று பாரதி ஏற்றிவிட , கவிதாவிற்கோ முகம் சிறிதாகி கொண்டே போனது , 

ஹே லூசு மாதிரி பேசாத டி , கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு எதாவது ப்ரொப்லெம் இருந்து இருக்கும் அதான் ஹெல்ப் செய்ய போயிருப்பாங்க  என்று பாரதிக்கு பதில் கூறினாலும் , மனதிற்குள் கலக்கமாக இருந்தது. 

ஹ்ம்ம்கும் அந்த பொண்ணு யாரோ என்றால் நீ சொல்ற மாதிரி இருக்கலாம் , அவள் வேற யாரும் இல்லை , நம்ம கிளாஸ்மேட் வசந்த் சிஸ்டர் தான் , அவனுக்கு இல்லாத அக்கறை அப்படி என்ன கீர்த்திக்கு சொல்லு , என்று பாரதி பேசிக்கொண்டே போக , கவிதாவிற்கோ தலை வலி அதிகமாகி கொண்டே போனது. அதிலும் அந்த பெண்ணை கூட்டி கொண்டு வண்டியில் ஏறும்பொழுது கூட வசந்த் கோபமாக தான் கீர்த்தியிடம் பேசினாங்க  , எனகென்னவோ இதில் கீர்த்தி ஏதும் அந்த பெண்ணிடம் தப்பாக அப்படி இப்படி என்று கூறிக்கொண்டே போக , பாரதி ப்ளீஸ் , இதுக்கு மேல கீர்த்தி பற்றி ஒரு வார்த்தை பேசினாலும் நான் அமைதியாக இருக்கமாட்டேன் பார்த்து கொள், தயவு செய்து இங்கிருந்து கிளம்புறியா , என்னை தனியாக விடு என்று அவ்விடம் விட்டு கவிதா நகர பாரதிக்கோ எதையோ சாதித்து விட்ட திருப்தி தோன்றியதை கவி பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இந்த கீர்த்தி , போன் கூட எடுக்கவில்லை , என்னவாக இருக்கும் , ப்ரொப்லெம் என்றால் என்னிடம் சொல்லிருப்பானே, பட் இந்த பாரதி சொல்ற மாதிரி ஏதும் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை , வரட்டும் கேட்டுவிடவேண்டியதுதான் என வகுப்பில் கூட கவனம் இல்லாது இருந்தவளை கலைத்தது , பக்கத்துக்கு வகுப்பினர் பேச்சு, 

ஹே!, நேற்று பார்த்தியா மச்சி , அந்த வானதி , அதான்டா நம்ம பக்கத்து கிளாஸ் வசந்த் சிஸ்டர் , அவளை இந்த கீர்த்தி எப்படிதான் கரெக்ட் செய்தான்னு ஒண்ணும் புரியவில்லை , ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நேற்று இருவரும் போனதை பார்த்தால் இவன் ஏதோ , கண்டிப்பாக எல்லை மீறி இருக்கவேண்டும் , அதான் அவள் மயங்கி விழ , இந்த கீர்த்தி தூக்கி செல்லாத குறை தான் போ, அது எப்படி டா இவனுக்கு மட்டும் இவ்வளவு எளிதாக மடங்குதுங்க ஏற்கனவே கவிதா இப்போ வானதி ஹ்ம்ம்   , நாமளும் தானே ட்ரை செய்தோம் என அவர்கள் அரட்டை அடித்து கொண்டிருப்பது தெளிவாக கவிதாவின் காதில் விழ, ஆக பாரதி கூறிய அனைத்தும் உண்மை தான் , கீர்த்தி துரோகம் செய்தானா என யோசித்தவளால் அதற்கு மேல் வகுப்பில் அழுகையை அடக்க இயலாமல் , ப்ரியாவிடம் பொய் கூறி கொண்டு வெளியில் வந்து பார்க்கில் அமர்ந்தவளுக்கு அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. 

அவள் அழுது கொண்டிருக்க , அப்பொழுது தான் கல்லூரிக்குள் வந்த கீர்த்தி , இவளை பார்த்து  அதிர்ச்சியில் இங்க என்ன செய்கிறாய் என்பது போன்ற அர்த்தமான  பார்வை பார்த்துவிட்டு , வெயிட் பண்ணுடா என்று சைகையுடன்  வேற பில்டிங் நோக்கி நகர்வது தெரிய , கோபம் தலைக்கேற  அவன் அருகினில் விரைந்தாள். 

கீர்த்தி , உன்னிடம் முக்கியமாக நான் பேசவேண்டும் , என்று பேசிக்கொண்டே போக அவளிடம் நிற்ககூட நேரம் இல்லாமல் கவி ப்ளீஸ் இப்பொழுது இம்பார்டன்ட் வொர்க் இருக்கு , நீ கிளாஸ்க்கு போ நான் வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று அவன் கூறிய  பதிலை கூட கவனிக்காமல் , கவிதாவோ ஏன் உங்களுடைய புதிய லவர் வானதி மேடம் பார்க்க போகனுமா! என்று அவள் சந்தேக குரலில் கேட்க , அவளை அதிர்ச்சி கலந்த பார்வை பார்த்தான் கீர்த்தி. 

என்ன லவர்ரா , என அவன் கேட்க , ஏன் எப்படி தெரிந்தது என்று ஷாக் ஆகிவிட்டாய் போல ,அதான் நீங்க செய்த காரியம் நேற்று காலேஜ் முழுவதும் பரவியதே , இன்னும் என்னிடம் மறைக்க என்ன இருக்கு, சோ கிளாஸ் டைம்ல நான் , அப்புறம் மற்ற நேரங்களில் அவளா குட் கீர்த்தி , நேற்று நீங்கள் இருவரும் கல்லூரி என்று கூட பார்க்காமல் ச்ச  ,அதான்  பாரதி தான் தெளிவாக கூறிவிட்டாலே , என்று கவிதா பொறுமை இல்லாமல் வார்த்தை அளவு மீறி பேசிக்கொண்டே போக   ,

 சோ என்னை பற்றி நீ இவ்வளவு தானே புரிந்துவைத்து  இருக்கிறாய் அல்லவா , மிகவும் நல்லது , உன் பாரதி கூறிய அனைத்துமே உண்மைதான் , இப்பொழுது வழியை விடுகிறாயா நான் செல்லவேண்டும் , பட் சத்தியமாக உன்னிடம் இதை நான் எதிர்பார்க்க வில்லைடி , இனி உனக்கு   புரியவைத்தும்  பயனில்லை  , ச்ச என அவளை  அலட்சிய பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். அவன் அவளிடம் பேசிய கடைசி நாள் கூட அதுதான், அவனுடைய பதிலில் அதிர்ந்து நின்றாலும் , விளக்கம் கூட கூற முடியவில்லை என்றால் இதில் பொய் என்பதே இருக்க வாய்ப்பில்லை என்று தனக்குள்ளே எண்ணிகொண்டு அவனை பிரிந்த அந்த நாட்கள் நியாபகத்திற்கு வந்தன. 

யாரோ ஒருவர் கூறியதை வைத்து , அவனிடம் அன்று அப்படி பேசினேனே அவன் என்னை மன்னிக்க கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லைதான் , இருந்தாலும் அவனிடம் பேசவேண்டுமே என்று மற்றதெல்லாம் மறந்து  அவசர அவசரமாக அவனுக்கு கால் செய்தாள். 

கவிதாவின் எண்கள் ஒளித்திரையில் தெரிய , இந்த நேரத்தில் போன் செய்கிறாள் ஏதும் ப்ரொப்லெம் இருக்குமோ என்று அவசரமாக அட்டென் செய்தவன் வேண்டும் என்றே யார் என்று கேட்க ,  

ஹலோ கீர்த்தி,

ஹ்ம்ம் , எஸ் கீர்த்தி ஹியர்....

நான் கவி..கவிதா பேசுகிறேன்...

ஓகே சொல்லுங்க , என்ன விஷயம் , 

கீர்த்தி ப்ளீஸ் , தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் , நான் இதுவரை பாரதி கூறிய அனைத்துமே உண்மை என்று நம்பி உங்களிடம்  , என அவள் இன்று இரவு வரை நடந்த அனைத்து விவரங்களையும் ஒன்று விடாமல் மூச்சு வாங்க  கூற , அதுவரை அமைதி காத்தவன் , ஓகே ஸோ வாட் என ஒரே வார்த்தையில் வினவ , 

மூச்சடைத்து நின்றாள் கவிதா, கீர்த்தி ப்ளீஸ் நீங்கள் தயவு செய்து என்னை மன்னித்து ஏற்றுகொள்ளவேண்டும் என்று கவி கூறுவதை கூட கண்டுகொள்ளாமல் , அவள் கூறினால் என்று இவள் நம்பினாலாம் , அவள் கூட வாழ்ந்தேனே , இல்லை உன்னுடன் வாழ்ந்தேனா , சின்ன நம்பிக்கை கூட இல்லாமல் , இப்போ பேசவந்துவிட்டாள் , ஃபோனை வைடி , என்று அவன் கோபமாக பேசி விட்டு கால் கட் செய்ய , கவிதாவிற்கோ என்ன செய்து இவனை சரி செய்ய முடியும்  என தெரியாமல் சிலையாகி நின்றாள்.

அந்த சைடில் , கீர்த்திக்கோ ! அப்பாடா ஒரு வழியாக மேடம்க்கு இப்பொழுதாவது உண்மை  புரிந்ததே , இன்னும் ஒரு  மாதத்தில் அனைத்து ப்ரொப்லெம் க்ளியர் செய்து எப்படியாவது இவளை திருமணம் செய்து விடவேண்டும் , இவ்வளவு நாட்கள் தூரத்தில் இருந்த பொழுது கூட தெரியவில்லை , ஆனால் இந்த இரண்டு நாட்களாக அருகில் வந்து என்ன பாடுபடுத்திவிட்டால் , இனியும் இவளை பிரிந்து நம்மால் வாழ இயலாது என அவன் கட்டிலில் இருந்த அவளது புகைபடத்தினை பார்த்து கண்ணடித்து கொண்டு நிம்மதியாக உறங்க போனான் நமது ஹீரோ கீர்த்தி...........................................



ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......



Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI

No comments:

Post a Comment