Saturday, 3 November 2018

என் காதல் நிலா !


 அத்தியாயம் 2



...........இருவரும் ஒவ்வொரு மனநிலைமையில் எண்ணி கொண்டு உறங்க துவங்க , அடுத்த நாள் மிக அழகாக விடிந்தது.

அஜூ நேரம் ஆகிவிட்டது , இப்பொழுது கிளம்பினால் தான்  அப்பாவை சமாளிக்கும் நிலைமை வராது என அவனுடைய  திவி  கெஞ்சி கொண்டிருக்க , இது எதுவும் காதில் கேட்காமல் அவன் அவளை பார்ப்பது ஒன்றே மிக முக்கியமான வேலை என்பது போல் அதனை தொடர , சரி  நீங்கள் இப்படியே பார்த்து கொண்டிருங்கள் , நான் இப்பொழுது கிளம்புகிறேன்  என்று எழ போனவளை , கை பிடித்து நிறுத்தினான்  அர்ஜுன். 

திவி , நீயே ஏதோ ஒரு நாள்  தான்  வெளியே , அதுவும் கோவிலுக்கு வர சம்மதம்  சொல்லுகிறாய் , இதில் வந்ததும் செல்ல வேண்டும் என்றால் எப்படி , என்னை பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா என  அவன் தன்  முகத்தினை சுருக்க , 

இருக்கும் சார் , நன்றாகவே இருக்கும் , இப்பொழுதே பார்த்து பார்த்து பேசிவிட்டால் திருமணத்திற்கு பிறகு என்ன தான் செய்வது  , என்றவளை நோக்கி  , என்ன திவி  உன்னை யார்  அதன் பின்  இப்படி தனியாக  பேச விட போவது ,  நம்மளுடைய  தேனிநிலவு  முடியவே  எப்படியும் ஒரு மாதம்  தேவைப்படும் , அப்புறம் அப்படி இப்படி என்று அவன் இழுக்க , 

என்னது ஒரு மாதமா ,என தன்  கண்களை விரித்து அவள் பார்க்க ,நீ இப்படி எல்லாம்  கோவில் என்று யோசிக்காமல் என்னை  பார்த்தால் , பின் உன் தந்தை யிடம்  நம் திருமணத்திற்கு இன்றே பேச கிளம்பிவிடுவேன் , சரி தானா  என கேட்க , 

ஐயோ , அஜூ நீங்கள் வேற , நான்  ஒருவழியாக முதலில் தெரிவித்து , பின் உங்களை  வரவைப்பது  தான்  நல்லது  என்பவளை நோக்கி , மிகவும் அதிக நாட்கள் எடுக்காதே   திவி  என்னால் பொறுக்க முடியாது , அப்புறம் தப்பாக ஏதும் நடந்தால்  நான் பொறுப்பில்லை பார்த்து கொள்  என கண் சிமிட்ட , தன் வெக்கத்தினை மறைக்க , கிளம்புவோம்  வாருங்கள் என அவள்  நகர  , திவி  .........உனக்கு ஒரு மாதம்  தான்  நேரம் , அதற்குள்  பேசி விடு ...... இல்லையென்றால்  நானே  என அவன்  பாட்டில்  பேசி கொண்டிருக்க ,

ஹலோ  சார் , கீழே  நாம் இருவருக்காக  அனைவரும் காத்து கொண்டிருக்கிறார்கள் , நீங்கள்  யாரிடம் என்ன  பேச வேண்டும்  என்று  யாரோ தன்னை  உலுக்க , கஷ்டப்பட்டு  தன்  கண்களை திறக்க  , அவனுக்கு நேர் எதிரே  மெரூன்  கலர்  சில்க் காட்டன்  புடவையில்  தன்  மனைவி  நிற்க , அட  கடவுளே  இது எல்லாம்  கனவு  தானா , சத்ய  சோதனை டா  அர்ஜுன் ,  என்று  தன்  கனவிலிருந்து  வெளியே  வந்தான்  அவன். 

இல்லை , ஏதோ ஒரு கனவு  இல்லை  ஒன்றுமில்லை  என்று  சமாளித்து  விட்டு , நீ  கீழே  சென்றுவிடு , நான்  ஒரு 15மினிட்ஸ்  வந்து விடுவேன்  என்று  அவளை  அனுப்பி வைத்து  விட்டு எழுந்தவனுக்கு ,  ஹ்ம்ம்  ஒரு காலத்தில்  எப்பொழுது  திருமணம்  என்று காத்திருந்தோம் , இன்று  திருமணம்  ஆகியும்  கூட இப்படி  தனியே  வாழ்கிறோம் , இவளை பிரிய கூடாது  என்று செய்த சிறு தவறு  , இப்படி  ஒரேடியாக  தன்னை  அவளிடமிருந்து  பிரிக்கும்  என  எதிர்பார்க்காதவனாக , கடவுளே  எப்படியாவது  இவளுக்கு  உண்மையை  புரிய வைக்க  வேண்டும் , என்று  ஒரு  நிமிடம்  கண்  மூடி  திறந்தவன் , கீழே  செல்வதற்கு  ஆயத்தமானான். 

அபிராமி  பாட்டி  , நேற்று வந்த  பேரனின்  மனைவியிடம்  அவனது பெருமைகளை  அள்ளி  வீசி கொண்டிருக்க, திவ்யா  அதை  ஆர்வத்துடன்  அவனை பற்றி  அறிந்து  கொண்டிருந்தாள். 

என்னுடைய  பேரன்  மாதிரியே  ஒரு  கொள்ளு பேரனை  எப்பொழுது தர போகிறீர்கள்  என மூத்தவள்  விசாரிக்க , திவ்யாவிற்கோ  , மனதினில்  அர்ஜுன்  உருவில் சின்ன கண்ணனை  பார்க்க எதிர்பார்ப்பு  இருந்தாலும் இன்று  இருக்கும் சூழ்நிலையில்  எதையும் யோசிக்க  முடியவில்லை ,  இருப்பினும்  பெரியவரிடம் மாட்டி கொள்ள முடியாதே , அதானே பாட்டி , அடுத்த வருடம் , இந்த நேரம் உங்கள்  பேரன்  உங்களிடம் இருப்பான்  என  சிறு  வெக்கத்துடன் பதில் அளித்து  கொண்டிருக்க , 

மாடி  படிகளில்  இறங்கி  கொண்டிருந்த  அர்ஜுன்  அனைத்தையும்  தெளிவாக  கேட்டாலும் , அதை  தன்  மனையாள்  நேரில்  சொல்லி  கேட்க  ஆசைப்பட்டு , என்ன  பாட்டி  அடுத்த வருடம்  என்ன  வேண்டும்  உங்களுக்கு  என்று  பேசிக்கொண்டே  , இப்பொழுது  இவள்  அருகில்  அமர்ந்தால்  உண்டு  என்ற  பாவனையுடன்   சோபா  பெரிய  அளவாக இருப்பினும் , மனைவியின்  பக்கத்தில் அவளை  நெருக்கி  கொண்டு  அமர்ந்தான்  அவன். 

திரும்பி  அவனை  முறைத்தவள்  , எனக்கு  கிச்சனில்  வேலை  இருக்கு  என  எழ  போக , அதெல்லாம்  அனைத்தும்  முடிந்து  விட்டது  என்று  கோகிலா  வந்து  தன் மாமியார்  அருகில் அமர , இதற்கு மேல்  ஒன்றும் இயலாது  என  அமைதியாக  தன்னை கட்டுபடுத்தி  கொண்டாள்  திவ்யா . 

அது  ஒன்றும்  இல்லை  கண்ணப்பா , எனக்கு  உன்னை  போன்று  ஒரு கொள்ளு  பேரனை  எப்பொழுது  தர  போகிறீர்கள்  என  கேட்டு  கொண்டிருந்தேன் ,  அதற்கு  உன்  மனைவி  அடுத்த  வருடம்  இந்த  நேரம்  என்  மடியில்  பேரன்  இருப்பான்  என்று  கூறி  என்னை  மகிழ்ச்சியில்  ஆழ்த்திவிட்டாள்  என  தெள்ள தெளிவாக கூற ,ஐயோ  இப்படியா  எல்லாத்தையும்  சொல்வார்கள், இவன்  நம்மை  பற்றி  என்ன நினைப்பான்   என்று  மனதினில் நினைத்து  கொண்டிருக்க , 

அர்ஜுனோ  மிக சந்தோசமாக  , கண்டிப்பாக  பாட்டி , மேலிடமே  சொல்லி  விட்டாள்  என்றால்  அதற்கு மேல்  பேச்சிற்கே இடம்   இல்லை , கண்டிப்பாக   நடக்கும்  என  அருகில்  இருப்பவளை  பார்க்க , ஏற்கனவே  அவன்  நெருக்கம்  தந்த  மயக்கம் ,  இப்பொழுது  அவன்  பார்வை  என  சமாளிக்க  முடியாமல் வெக்கத்தில்  கன்னங்கள்  சிவக்க  , நான்  சென்று  காலை  சாப்பாட்டினை  எடுத்து  வைக்கின்றேன், மாமா  வரும்  நேரம்  ஆயிற்று  என்று  அங்கிருந்து  ஓடுபவளை  கண்டு  மூவரும்  சிரித்தனர். 

காலை  உணவு  முடிந்து  , சந்தான ராமசாமி  அலுவலகம்   கிளம்ப , மூத்தவள்  ஓய்வெடுக்க  தன்  அறைக்கு  செல்ல ,  மதியம்  சாப்பாடு  நான்  பார்த்து  கொள்கிறேன்  நீ  சென்று  அர்ஜூனுடன்  பேசி கொண்டிரு  என்று  அவளை  அனுப்பி  வைத்தாள்   கோகிலா. 

ஆமா  கார்த்தி  , நீ  அதையெல்லாம்  தெளிவாக  பார்த்து  கொள் , அந்த  கிளைண்ட்க்கு பெமென்ட் ப்ரோசஸ்    ,என  தன் நண்பன்  மற்றும்  தொழில்  முறை  பார்ட்னரிடம்  விளக்கி  கொண்டிருந்தவன்  , அறைக்குள்  திவ்யா  நுழைய  , மச்சான்  நான்  பிறகு  உனக்கு  போன்  செய்கிறேன்டா   , என்று  தொடர்பினை  துண்டித்தவன் , அப்புறம்  திவ்யதர்ஷினி சாரி  சாரி  பெயர்  சொல்லவில்லை மேடம் ,   பாட்டியிடம்   சொன்னது  எப்பொழுது  நடைமுறை  படுத்தலாம்  என்று  ஆர்வமாக  விசாரிக்க , அவனை  சுட்டெரிக்கும்  பார்வை  பார்த்தவள் , தன்  அறைக்குள்  நுழைய  முயல , அவளை  பிடித்து  நிறுத்த  அவன்  இழுத்த  வேகத்தில்  நிலை  தடுமாறி  அவள்  விழ போக , அதை  தடுக்க   அவளை  பிடித்தவன்  , சாரி  என்று  வேகமாக  விலகினான். 

இவன்  நெருங்கி  வந்தாலும்  தொல்லை , தள்ளி  போனிலும்  தொல்லை  தான்  என்று  அலுத்து கொண்டவள்  , பெரியவர்கள்  மனது  நம்மால்  கவலை பட  வேண்டாம்  என்று  அவர்களுக்காக நான்  கூறிய  பொய்  என  உங்களுக்கே  தெரியும்  என்று  நகர  ஆரம்பிக்க , 

இதே தான்  திவி  , ஒரு  நன்மைக்காக  தாராளமாக  பொய்  கூறலாம்  , அப்படி  தான்  நான்  உன்னிடம்  கூறியதும் , இதில்  என்னை  தள்ளி  வைத்து  நம்மை  கஷ்ட படுத்த ஒன்றுமே  இல்லை  , நீ  சிறிது  புரிந்து  கொண்டால்  போதும்  என்று  அவன்  இது  தான்  நேரம்  என்று  விளக்க  , அது  எப்படி  உங்களையே  முழுதாக  நம்பும்  ஒருத்தியிடம்  இறுதி  வரை  உண்மையை  மறைத்து  , 

அவளால்  உங்களை  பிரிந்து  வாழவே  முடியாது  என்ற  நிலை  வந்ததும் , அப்பாடா  இனி  இவளால்  ஒன்றும்  செய்ய  இயலாது  என  தெரிந்து  கொண்டு  உண்மையை   சொல்விர்கள்  , நான்  உடனே  ஏற்று  கொள்ள   வேண்டுமா  , இதற்கெல்லாம்  ஏற்றவள்  நான்  இல்லை  புரிந்ததா , சோ  உங்களுடைய  நேரத்தினை  வீணடிக்காமல்  , வேறு  ஒருத்தியை  நீங்கள்  தேர்ந்தெடுத்தாலும்  சரிதான் , நான்  வேண்டுமானால் விலகி  கொள்கிறேன்  என்று  நகர  போனவளை  கை  பிடித்து  நிறுத்தி  ,

 இந்த  ஒரு  ஜென்மம்  மட்டுமில்லை  மை  டியர்  மனைவி , இன்னும்  எத்தனை  ஜென்மம்  என்றாலும்  இந்த  அர்ஜுனிற்கு  திவ்யா  ஒருத்தி  தான்  மனைவி  புரிந்ததா , அது  மட்டுமில்லால்  நீயே  பாட்டியிடம்  கூறியது  போன்று  நம்  கனவு  படி  இரண்டு  குழந்தை  என  நாமும்  மிக  சந்தோசமாக  வாழ  தான்  போகிறோம்  , அதுவும்  கூடிய  விரைவில்  என்று  சொல்லிவிட்டு  அந்த  அறையை  விட்டு  வெளியேறினான்  அவளது  கணவன் அஜூ .............................




மீண்டும் வளரும் ..........






பிரண்ட்ஸ் , இது என்னுடைய இரண்டாம் நாவல் , முந்தைய நாவலை போன்று இதற்கும் உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.......தாங்க் யு நண்பர்களே....






இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி


சாந்தா தேவி . வீ


  












Friday, 19 October 2018

YEN KAADHAL NILA

                               

                                      என் காதல் நிலா !


 அத்தியாயம் 1





அது ஒரு பெரிய மண்டபம், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அமர ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் மற்றும் பலூன்களால் அலங்கரிக்க பட்டிருக்க , ஒளி உமிழும் விளக்குகள் பாரபட்சமின்றி தன்னுடைய கதிர்களை வீசி கொண்டிருந்தது.

திருமண மண்டபம் உறவினர்களால் நிறைந்து இருக்க , இரு குடும்பங்களும் வந்து கொண்டிருப்பர்வர்களை வரவேற்பதிலும் அவர்களை சாப்பிட செய்து கவனிப்பதிலும் நேரம் சென்று கொண்டிருந்தது .

வந்தவர்கள் மாப்பிள்ளை பெண்ணின் ஜோடி பொருத்த  அழகினை பார்த்து வியந்து பேசி கொண்டிருக்க , சந்தானராமசாமி  மிக பெருமையாக , நாம் தேடியிருந்தால் கூட இப்படி ஒரு பெண்ணை கண்டிருக்க முடியாது, என்ன இருந்தாலும் என் மகனாயிற்றே  என்று நம் கதையின் நாயகனை பற்றி தன் மனைவி கோகிலாவிடம் புகழ்ந்து கொண்டிருந்தார்.

நாராயணமூர்த்தியோ  பெண்ணை பெற்றவராயிற்றே , தன்னுடைய சுகர் மாத்திரையை கூட போட மறந்து வேலைகளை கவனித்து கொண்டிருந்தார் . அவருடைய மனைவி துர்காதேவியோ அவரை எப்படியாவது  மாத்திரை போட  வைத்திட வேண்டும் என அவருக்கு பின்னாலயே சென்று கொண்டிருக்க , திருமணத்திற்கு வந்த வாண்டுகள் தங்களுடைய மிக முக்கியமான பணியான  ஓடி பிடித்து விளையாடும் விளையாட்டின் மூலமாக அங்கிருந்த பெரியவர்களை இடித்து தள்ளி ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தனர்.

சந்தானமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த கச்சேரி குழுவினரோ இன்றைய இளைஞர்களுக்கு தேவையான காதல் பாடல் மூலமாக அங்கிருந்த இளசுகளுக்கு இலவச விருந்து படைத்து கொண்டிருந்தன. இப்படி ஒரு திருமண சாப்பாடு எங்கேயும் சாப்பிட்டது கிடையாது என மணமகன் உறவினர்களே பெருமை பேசும் அளவிற்க்கு நாராயணமூர்த்தி அந்த ஊரிலேயே மிக பெரிய சமையல்காரரை ஏற்பாடு செய்து அதையும் குறைவில்லாமல் கவனித்து கொண்டிருந்தார் .

மணமேடையில் அலங்காரம் மின்னி கொண்டிருக்க , ஐயர் மந்திரங்களை செவ்வனே சொல்லி கொண்டிருந்தார். வேண்டாவிருப்பாக தன் அருகில் அமர்ந்து , இன்னும் சிறிது நேரத்தில் தன் மனைவியாக போகிறவளை நிமிர்ந்து பார்த்தான் ஈஸ்வரன்  என்று பாசமாக பெற்றவர்களாலும் , அர்ஜுன் சார் என்று தொழில் வட்டாரத்தாலும் , அர்ஜுன் என்று நண்பர்களாலும் , அஜூ என்று ஒரு காலத்தில் அவளால் காதலாக  அழைக்கப்பட்ட நம் நாயகன் அர்ஜுனேஸ்வரன் .

மயில் கழுத்து நிற பெரிய பார்டர்  ஜமுக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட புடவையில் ரோஜா நிற ஆரி வேலைப்பாடு செய்யப்பட்ட ரவிக்கையில்   , தங்க மயிலாக அவள் ஜொலித்து கொண்டிருக்கும் அவளது  அழகு , அவனை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. 

பார்வையின் வீரியம் தாங்காமல், திவ்யா என்று பெற்றவர்களாலும் , தர்ஷினி என்று தோழிகளாலும் , திவி என்று அவனால் மட்டுமே அழைக்கப்பட்ட நம் கதையின் நாயகி திவ்யதர்ஷினி நிமிர்ந்து அவனை பார்க்க , பட்டு வேட்டி பட்டு  சட்டையில் அவனுக்கே உரித்தான கம்பீரத்துடனிருக்க , ஒரு நிமிடம் இருவரும் தங்களை மறந்து மற்றவரை ரசிக்க , ஐயர் கூறிய மந்திரத்தில் முதலில் விழித்தது அவளேதான். 

இவனையா இப்படி பார்த்து கொண்டிருக்கிறோம் என்று அவள் ஒரு கோப பார்வையுடன் முகத்தினை திருப்பிக்கொள்ள , இன்னும் கொஞ்சம் நேரம் இவ பக்கத்தில் நான் உட்கார்ந்து இருந்தால், என்னை ஒரு வழி ஆக்கிவிடுவாள்  என்று மனதில் நினைத்து கொண்டு, ஐய்யரே  மந்திரத்தினை விரைவாக கூறினால் நன்றாக இருக்கும் என பேசிவிட, ஏன் உங்களால் ஒரு மணி நேரம் கூட பொறுத்து கொள்ள முடியாதா என்பது போல் அவள் அலட்சிய பார்வையை வீச , கடவுளே துவக்கமே இப்படியா என்று விதியை நொந்து கொண்டு அவன் தனது திருவாயை மூடியதுடன்  தன் வேலையை தொடர ஆரம்பித்திருந்தான்.

சிறியவர்கள் இப்படி நினைத்து கொண்டிருக்க , பெரியவர்களோ தங்களது கடமையை கண கச்சிதமாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தனர் . முகூர்த்த நேரம் நெருங்க , பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் அவள் கழுத்தில் மங்கள நாண் பூட்டி , திவ்யதர்ஷினி நாராயணமூர்த்தியாக இருந்தவளை , திவ்யதர்ஷினி அர்ஜூனாக மாற்றி  தன்  மனைவி ஆக்கியிருந்தான் அர்ஜுன். 

இந்த ஒரு நாள் , இந்த ஒரு நொடி ஒவ்வொரு பெண்ணுமே தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருப்பதை போல ,  திவ்யாவிற்கும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நெற்றியில் குங்கும திலகமிட்டு , அக்கினி சுற்றி வலம் வந்து பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் அந்த நாள் இனிமையாக துவங்கியது.

ஒருவாறாக அனைத்தும் முடிந்து கண்ணீர் மல்க பெற்றவர்களை பிரிந்து  , திவ்யா , அர்ஜுன் வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வர 5மணி ஆகியிருந்தது. விளக்கு ஏற்றி அந்த குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக அவள் மாறியிருக்க , எங்கிருந்தோ ஒரு பெரியவர் இன்று மிகவும் நல்ல நாள் , அனைத்தும் இன்றே வைத்து விடலாம் என்ற ஆலோசனைபடி , சாந்தி முகூத்தத்திற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. 

இரவு 9மணி அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லாமல் அவளை , அவன் அறைக்குள் அனுப்ப ,  மற்றவர் முன்னிலையில் பயத்துடன் , வெட்கமும் இருப்பது போன்று வந்தவள் , உள்ளே வந்ததும் , எந்த ஒரு எண்ணமுமின்றி , எனக்கான அறை எங்கே என்று அவனை அழைக்க , அப்பொழுது தான் அவளை நிமிர்ந்து பார்த்தான் நம் அர்ஜுன்.

காலையில் ஒருமாதிரி அழகு என்றால்  , இப்பொழுது வேறு மாதிரியாக , மஞ்சள் நிற ஷிபான் சில்க் புடவையில் அவள் நிற்க , ஏதும் பேச தோன்றாமல் அவளை பார்த்து கொண்டிருப்பவனை , உங்களுக்கு வேலை இல்லை என்றால் அப்படி வெளியே சென்று வாருங்கள் , எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது , என் அறை எங்கே என்று கூறினால் வசதியாக இருக்கும் என்பவளை ,மனதில் ஒரு வித ஏக்கத்துடன் , அதற்கு முன் சிறிது பேச வேண்டும் என்று கூறினான் அவன்.

நமக்குள் பேச வேண்டிய அனைத்துமே பேசியாகிவிட்டது, மற்றவர் முன் எப்படி நடிக்க வேண்டும் என நீங்கள் பாடம் எடுக்க தேவையில்லை, என்று சட்டெனெ மூஞ்சியை திருப்பி கொண்டாள் திவ்யா.

இதோ பார் திவி , என துவங்கியனை , அப்படி கூப்பிட உங்களுக்கு தகுதி இல்லை என்று தெளிவாக பேசிதானே திருமணமும் நடந்தது, பிறகு இன்னும் என்ன , என்று கடுகடுத்தவளை , ஓகே திவ்யதர்ஷினி என்று அவன் துவங்க , என் பெயரை கூட நீங்கள் கூப்பிட கூடாது என்று கோபமாக உரைத்தாள் அவனது மனையாள்.

சின்ன ஒரு கேலி புன்னைகையுடன் அவளை நோக்கி , சரி அப்படி என்றால் என் நண்பனை போன்று டியர் , டார்லிங் , கண்மணி, குட்டிமா  என்று அழைக்கலாமா இல்லை நான் உன்னை அழைக்காமலே என் மனது புரிந்து நீயாக திரும்பி விடப்போகிறாயா  என்று கேலி செய்பவனை , என்ன நக்கலா என்று முறைக்கும் நிமிடத்தில் அவனுடைய அந்த புன்னைகையில் தன்னை மறக்கவும் தவறவில்லை திவ்யா.

ஓகே மேடம் , மற்றவர் முன்னிலையில் மட்டும் நான் எப்படி அழைத்தாலும் இது போன்று திருப்பி கொள்ள வேண்டாம் , மற்றபடி நானாக உன்னை அழைக்க போவதில்லை சரிதானா என்பவனை , இதுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று மனதிற்குள் அதற்கும் வசை பாடினாள் திவ்யா.

முன்னரே நாம் பேசியவாறு அதோ வலது புறம் அது உன்னுடைய அறை , நீயாக அழைத்தாலொழிய நான் அதற்குள் வரப்போவதில்லை , உன்னுடைய அனுமதி இல்லாமல் வேறு ஏதும் நடக்காது என்று அவன் ஒரு மாதிரியாக முடிக்க , நானாக உங்களை அழைப்பேனா , கனவில் கூட நடக்க போவதில்லை , என்று அதற்கு மேல் அங்கிருக்காமல் தன்னுடைய சிறிய அறைக்குள் நுழைந்து விட்டாள் . 

இருவரும் ஒவவொரு மனநிலைமையில் எண்ணி கொண்டு உறங்க துவங்க , அடுத்த நாள் மிக அழகாக விடிந்தது................................




மீண்டும் வளரும் ..........



பிரண்ட்ஸ் , இது என்னுடைய இரண்டாம் நாவல் , முந்தைய நாவலை போன்று இதற்கும் உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.......தாங்க் யு நண்பர்களே....



இப்படிக்கு 
உங்கள் நாவல் தோழி 
சாந்தா தேவி . வீ