Sunday, 15 May 2016

காதல் கவிதைகள் நீ !

 Chapter 15


.........................................இங்கே பாரு உன்னை எனக்கு பிடிக்குதா , பிடிக்கலையா என்பது விஷயம் அல்ல , நீ என்னை நம்பாமல் சென்ற அந்த நாளை இன்றும் மறக்கமுடியவில்லை போதுமா , ஸோ விருப்பமே இல்லாமல் தான் ஒத்து கொண்டேன் , இது தான் உண்மை நீ வேண்டுமானால் நன்றாக  அழுது விட்டு வா ,திருமணத்தையும் நிறுத்தி விடு  நான் உள்ளே செல்கிறேன், என்று அவளை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் விரைந்தான். 

அவளுக்கு தெள்ள தெளிவாக எல்லாமே புரிந்து விட்டது , கீர்த்தி ஒருநாளும் அவனை விட்டு போகபோவதில்லை, அவளை வெறுக்கவும் போவதில்லை  என்ற மிக பெரிய மன  நிம்மதியுடன் முக மலர்ச்சியுடன் அவளும் வீட்டிற்குள் நுழைந்தாள்.

கீர்த்தி , நேரம் ஆகிவிட்டது , இந்த நேரத்தில் கவி வண்டியில் தனியே செல்வது நல்லதல்ல , நீ சென்று காரில் விட்டு வா , என்ற தாய் சொல்லை எதிர்த்து பேசமுடியாமல் , காரில் சென்று கொண்டிருந்தனர் இருவரும். 
அமைதியா காரின் ஜன்னல் வழியே  நுழைந்த காற்று இதயத்தை தீண்டி செல்ல ,அதில் மூழ்கிபோய் அமைதியாக இருந்தாள்  கவிதா ,அவளது தனிமையை கலைக்காமல் இயற்கையை  ரசிக்க விட்டு அவளை ரசித்து கொண்டே வண்டியை ஓட்டினான் கீர்த்தி. ஒருவழியாக வீடு வரவும் அவனை உள்ளே வருமாறு பார்வை பார்த்து விட்டு கதவினை நோக்கி செல்ல , அது பூட்டி இருப்பது தெரிய , அவனிடம் ஒரு நிமிடம் என கூறிவிட்டு , தன் பர்சில் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றாள். 

அம்மா , எங்கே போய்டீங்க , வீடு பூட்டிஇருக்கு , என்னிடம் ஏதும் சொல்லவே இல்லையே , 

இல்லைம்மா  நானும் அப்பாவும் இங்கே கீர்த்தி வீட்டிற்க்கு தான் வந்து இருக்கோம் , அது வந்து கல்யாண வேலைகள் இருக்கு , அதை பற்றி பேசதான் , இப்போதான் வந்தோம் , நீ இருடா நாங்கள் ஒரு ஒருமணி நேரத்தில் வந்து விடுவோம் சரியா என கட் செய்ய போனவளை , 

அம்மா இருங்க , இங்கே என்னுடன் அவரும் வந்து இருக்காங்கம்மா , என்ன செய்வது என கேட்பவளை , 

அவருன்னா யார் டி , தெளிவாக சொல்லேன் கவி என்ற தாயிடம் , 

அம்மா அவருன்னா , அதான்ம்மா உங்கள் மாப்பிள்ளை , என இழுக்க, 

சம்பந்தி கூட சொன்னார்கள் , சரி நீ காபி , சாப்பாடு எதாவது  ரெடி செய்து கொடு , நாங்கள் வந்து விடுகிறோம் என வைத்து விட, முழித்து கொண்டு நின்றாள் கவிதா. 

என்ன என்பது போல் அவன் நோக்க , இல்லை இரண்டு பேரும் உங்கள் வீட்டில் தான் இருக்காங்க , ஏதோ திருமண வேலைகள்னு சொன்னாங்க, சரி 5மினிட்ஸ் இருங்க  , நான் காபி போட்டுவரேன் என்றவளை  ,இல்லை அதெல்லாம் வேண்டாம் நான் கிளம்புறேன் என்று கூறுபவனை தடுத்து இல்லை இருங்க , வந்துவிட்டேன் என்று கிச்சனுக்குள் சென்று , அடுத்த 10மினிட்ஸ்சில் காபியுடன் வந்து அவனிடம் குனிந்து நீட்டினாள் , 

இயல்பாக அவள் சூடிய மல்லிபூ  முன்னே வந்து விழ , தன்னிடம் காபி என்று நீட்டுபவளை உற்று நோக்கினான் அவன் , காரில் இருந்தே அவளை ரசித்து கொண்டு வந்தவன் , இப்பொழுது மிக அருகில் அழகே உருவாக அவனுடைய வருங்கால மனைவி நிற்பதை கண் இமைக்காமல் பார்த்தவன் எழுந்து அவளை அணைப்பது போல் எழுந்து வர  , 

ஐயோ காபி , சூடு வேற என்று அவள் நியாபகபடுத்தவே நிகழ் காலத்திற்கு வந்தவன் , தன்னை கட்டுபடுத்த இயலாமல் சாரி.........என்று கூறி  அவளை விட்டு விலகி , நிகழ்வினை இயல்பாக எடுத்து செல்ல  முயன்றான். அவனது செய்கை புரிந்து வந்த சிரிப்பினை அடக்கமுடியாமல் நின்றாள் கவிதா. ஹ்ம்ம் இப்பொழுது நான் கிளம்புறேன் , அப்படி இல்லை என்றால் அதற்கு பின் எது நடந்தாலும் நான் பொறுப்பில்லை வரவா என கூறிவிட்டு விலகுபவனை , பெறுமையுடன் பார்த்தாள் கவிதா , இதான் என் கீர்த்தி வாய்ப்பு கிடைத்தாலும் தப்பு செய்ய நினைக்காதவனை எண்ணி சந்தோசத்துடன் , கடவுளே எப்படியாவது என் கீர்த்தியை என்னிடம் கொடுத்துவிடு என்று மனதார வேண்டி கொண்டு தன் திருமண நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். 

பின் வந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் தான் கீர்த்திக்காக ஏங்குவது எண்ணி தன்னையே  திட்டி கொண்டாள். ஒருவழியாக கல்யாண நாளும் நெருங்கி வர அலுவலகத்தில் இருந்து வேலையை விட்டு நின்று இருந்தாள் , ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி இருந்தவளை கலைத்தது அந்த ஃபோன் கால். 

அம்மா கொஞ்சம் வேலை இருக்கு , நான் வெளியே சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அந்த அபார்ட்மென்ட்க்குள் நுழைந்து ரூம் நம்பர் 205க்கு சென்றவள் காலிங் பெல் அழுத்தி நின்றவளை கதவினை திறந்து வரவேற்றாள் ஒரு நவ நாகரிக பெண். அவள் அணிந்து இருந்த  உடை அவளை ஒருமாதிரியாக காட்டியது.

நான்தான் கவிதா , ஐ திங்கக் நீங்கள் தான்  கால் செய்த மேனகாவா என்று வினவுபவளை பார்த்து , எஸ் எஸ் ப்ளீஸ் 2மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க மேடம் வந்து விடுகிறேன் என்று ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டால் அந்த புதியவள். 

கையில் ஜூஸ்உடன் அவன் சிறிது நேரத்தில் வர ,இங்கே பாருங்கள் மேடம் , நீங்கள் ஏதோ கீர்த்திவாசன் பற்றி  முக்கியமான விஷயம் என்று கூறவும் தான் நான் இவ்வளவு தூரம் வந்ததே கொஞ்சம் பாஸ்ட்டா கூறினிர்கள் என்றால் நான் செல்ல வசதியாக இருக்கும் என்று அவசரமாக கிளம்ப துடிப்பவளை பார்த்து சிறு கேலி புன்னகையுடன் , என்ன அவசரமாக போய் கீர்த்தியுடன் உன் திருமணத்தை பற்றி கனவு காண போகிறாயா , இங்கே பார் நான் செல்வதை தெளிவாக கேட்டு கொள் , அந்த கீர்த்தி அவ்வளவு நல்லவன் இல்லை , அதற்கு நானே சாட்சி , தயவு செய்து உன் திருமணத்தினை இதோடு நிறுத்தி விட்டு வேறு நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிகொண்டு வாழ கற்றுகொள் , என்னை போல் ஏமார்ந்து நிற்காதே , ஏதோ என்னை மாதிரி ஒரு பெண் வாழ்க்கையும் முடிய வேண்டாம் என்று தான் இவ்வளவு தூரம் நான் பேசுவதே என்று கூறுபவளை இப்பொழுது பார்த்து சிரித்து கொண்டு இருந்தது கவிதா. 

என்ன மேடம் , விளையாட்டா நீங்கள் யாரு என்ன கூட தெரியாது , இதில் நீங்கள் சொல்வதை நம்பி நான் திருமணத்தினை வேறு நிறுத்த வேண்டுமா , எனக்கு நிறைய வேலைகள் இருக்கு , நான் கிளம்புகிறேன் என்று எழுந்திருக்க போனவளை , நீ இப்படிதான் பேசுவாய் என்று எதிர்பார்த்தேன் , சரி இந்த போட்டோ அனைத்தும் பார்த்துவிட்டு பின் படித்த பெண்ணாக தெளிவாக பேசு சரியா என்று கேலி புன்னகையுடன்  அவள் நீட்ட , அதை வாங்கி பார்த்தவளது முகம் மாற ஆரம்பித்தது. சிறு யோசனையுடன் 

சரி கீர்த்தியை எப்படி உங்களுக்கு தெரியும் என்று வினவ , அவள் அந்த மேனகா அனைத்து விவரங்களையும் கூறி முடித்தாள். கீர்த்தி யுடன் கடந்த இரண்டு வருடமாக காதலியாக வாழ்ந்தாளாம் , இப்பொழுது பிள்ளை வேறு இருக்கின்றதாம் , திருமணம் என்று கூறி அவளை ஏமாற்றியதாக அந்த புதியவள் கூறினாள். 

ஒரு நிமிடம் கண் மூடி யோசித்து விட்டு அவளை நோக்கியவள் , சரி நீங்கள் எந்த ஊர் என்று சொல்லமுடியுமா , கீர்த்தியை எங்கு எப்பொழுது பார்த்திர்கள் என அனைத்து விவரங்களையும் தெளிவாக கேட்டு கொண்டாள் கவிதா, 

அந்த புதியவளோ , கவிதாவின் கேள்விகளை உள்வாங்கி கொண்டு ஒரு வழியாக எல்லாவற்றையும் சொல்லிமுடித்தாள். 

இறுதியில் நிம்மதி புன்னகயுடன்  ,சரி மேடம் , இப்பொழுது நான் கிளம்பலாமா என்று கேட்பவளை பார்த்து திகைத்து நின்றாள் அந்த புதியவள் , 
என்ன நான் பாட்டுக்கு இவ்வளவு சொல்கிறேன் நீ பாட்டுக்கு போறேன்னு சொல்ற , உனக்கு உன் வாழ்வை பற்றி கவலையே இல்லை போல் தெரிகிறது என்று கேலியாக பேச, 

ஓ , என் வாழ்வில் நீங்கள் ஏன் இவ்வளவு அக்கறையாக இருக்கிரிற்கள் என்று தான் புரியவில்லை , அதான் ஏன் என யோசித்து கொண்டு இருந்தேன் , என்று புன்னைகை செய்து விட்டு , நீங்கள் சொல்லும் ஏதும் உண்மை இல்லாதபொழுது நான் ஏன் அதை நினைத்து கவலைபடவேண்டும் என்று பேசுபவளை அதிசயமாக பார்த்தாள் புதியவள், 

என்னது பொய்யா , நான் எவ்வளவு தெளிவாக சொல்றேன் , நீ என்னவென்றால் ..... என்று அவள் இழுக்க 

 இங்கே பாருங்கள் மேடம் , நீங்கள் சொன்ன இரண்டு வருடத்திற்கு முன் உங்கள் காதல் பின் குழந்தை  என்றால் உங்கள் மகனுக்கு இப்பொழுது 5வயது ஆகிருக்க வாய்ப்பே இல்லை , அது மட்டுமில்லாமல் நீங்கள் கூறிய அந்த நேரத்தில் கீர்த்தி இந்தியாவிலே இல்லை , அவனுடைய மேல் படிப்பிற்காக யூ எஸ்ல இருந்தார் , ஸோ மேபீ உங்களது லவ் ஸ்டோரி அங்கே நடந்தது என்று சொல்லிருந்தால் நான் யோசித்து கூட இருப்பேன் , அதோடு  நீங்கள் கூறுவதை போல் உங்களது நேடிவ் பிளேஸ் திருநெல்வேலி என்றால் நீங்கள் பேசும் லாங்குவேஜ் முறையே மாறுகிறதே , அண்ட் இறுதியாக இந்த மேக்அப் கூட எனகென்னவோ இன்று தான் நீங்கள் முதல் முறை ட்ரை செய்த மாதிரி இருக்கு , அண்ட் உங்களுடைய டிரஸ் கூட அப்படிதான் தோன்றுகிறது , ஏதோ என்னை நம்ப வைக்க  நீங்கள் தயாராக உள்ளது போல் தெரிகிறது ,

கடைசியில் 5வருடங்களாக லவ் செய்யும் என்னிடமே  இது வரைக்கும் தப்பாக நடக்க வேண்டும் என்று ஒருநாளும்  கீர்த்தி நினைக்கவில்லை  , இரண்டு வருடம் காதலிப்பதாக கூறும் உங்களிடம் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறுபவளை ஆச்சர்யமாக நோக்கினாள் அந்த புதியவள் . 

ஸோ ப்ளீஸ் நீங்கள் ஏன் என்னிடம் இப்படி பொய் சொல்லவேண்டும் என்று புரியவில்லை ஆனால் ஒருமுறை அவனை தப்பாக நினைக்கவில்லை என்றாலும் ,விளக்கம் கூட கேட்காமல்  சந்தேகப்பட்டு , இந்த 3வருடங்களாக அவனை விட்டு தள்ளி இருக்கிறேன் , இனி என்ன செய்து என்னை புரிய வைப்பது என்று கூட புரியாமல் தனியாக அழுது கொண்டு வாழ்கிறேன் , இனிமேலும் என் கீர்த்தியை பற்றி தவறாக நீங்கள் இல்லை , கீர்த்தியே வந்து கூறினாலும் கூட நான் நம்பபோவதில்லை என்று அவள் சிறு கண்ணிருடன் முடிக்கையில் அவளை அவளுடைய கீர்த்தி வாசன் அணைத்து கொண்டு   இருந்தான்.

திடிரென்று யார் தன்னை அணைத்தது என்ற யோசனையில் நிமிர்ந்து முகம் நோக்கியவள் அவனது முகம் பார்த்து கீர்த்தி.............என்று விசும்ப , கவி ப்ளீஸ் அழாதே வேண்டாம் என்று தன் பிடியினை இறுக்கினான் அவன் அவளது கீர்த்தி வாசன். 

டேய் , நான் தான் சொன்னேன்ல , எனக்கு நடிக்க வராதுன்னு இப்பொழுது பார், அவள் கண்டேபிடித்து விட்டாள் , ஆனாலும் உன் லவர் இவ்வளவு யோசிக்க கூடாதுப்பா  என்று சிரிக்க , 

ஹே பவித்ரா வாலு  ,நாங்கள் தனியாக பேசவேண்டும் , ஸோ இப்பொழுது உன்னை கவனிக்க முடியாது , கொஞ்சம் கிளம்புறியா , அங்கே உன் பிரபா வெயிட்டிங் என்று அவளை கிளப்ப , டேய் டேய் நீ தனியாக கொஞ்சனும் சொல்லு , அதை விட்டு ஏன்டா அவரை கூப்பிடுற, சரி பார்த்து சார் பக்கத்து ரூம்ல தான் நாங்கள் இருப்போம் , அதை மறக்க வேண்டாம் என்று அங்கிருந்து இங்கிதமாக விலகினாள் பவித்ரா . 

அவளது அழுகை குறைய , கவி உன்னை டெஸ்ட் செய்ய நான்தான் என்னுடைய ப்ரண்ட் வெச்சு இப்படி பேச செய்தேன்னு கோபமாடா என்று வினவ , 

ப்ராமிஸா இல்லை கீர்த்தி , இன்பாக்ட் நானே எப்படி உன்னிடம் ப்ரூவ் செய்றதுன்னு யோசித்து கொண்டுதான் இருந்தேன் , நல்லவேளை நீயாக அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி என்று அவள் அழ , 

இங்கே பார் , நார்மலா நாம் பிரிந்து இருந்த பொழுது அழுதாலே உன்னை கண்ட்ரோல் செய்ய ஹக் பண்ணுவேன் , இப்போ நீ என்னை முழுசாக நம்புகிறாய் என்று தெரிஞ்சும் நீ என்னுடைய கைகளுக்குள் இருக்குற இந்த நிலைமையில் என்ன செய்வேன்னு நீ யோசிக்க வேண்டியது இல்லை என்று நம்புறேன் புரிஞ்சுதா டியர் என அவன் இழுக்க....

ஐயோ கீர்த்தி நீ வேற என்று  ஆரம்பிக்க , ஏன்! யாரோ என்னுடைய அறைக்குள் வந்து , நான் வரைந்த போட்டோ அடியில் , யார் உங்களை தடுத்தது செய்யவேண்டியது தானே என்று தைரியமாக எழுதி வெச்சுட்டு போய்ட்டாங்க , இப்போ எதுக்கோ பயம் என்று கூறினால் என்ன அர்த்தம் என்று அவன் நியாபக படுத்த , ஐயோ பார்த்துடீங்களா அதை என்று சிணுங்கினாள் அவள். அது திருமணத்திற்கு பிறகு என்று மீனிங் செய்து எழுதியது என்று பதிலளித்தாள்  கவிதா.

கவி நீ என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறாய் என்று கேட்கும் பொலுதுஇ எவ்வளவு  ஹாப்பியாக இருக்கு தெரியுமா, நிஜமாக நான் எதிர்பார்கவே இல்லை , தாங்க்   யூ ஸோ மச் டியர் , குட்டிம்மா என்று அவன் தன் அணைப்பினை வலுபடித்தினான். 

கீர்த்தி எப்பயுமே , நான் உன்னை தப்பாக நினைத்தது இல்லை , அன்று ஏதோ கேட்க நினைத்து எதையோ கேட்டு உன்னை  பிரிந்து இவ்வளவு நாட்களும் நரக வேதனையும் அனுபவித்து விட்டேன் , இதுவே ஏன் வாழ்விற்கு போதும் என்று கருதுகிறேன், என்னை மன்னித்து நீ ஏற்று கொள்வாயா ப்ளீஸ் என்று அவள் சந்தேகமாக வினவ , 

அப்படி இல்லை கவி , அன்று தவறு உன்னிடம் மட்டும் இல்லை , நீ தான் எதையோ கேட்டு கொண்டு என்னிடம் கோபம் கொள்கிறாய் என்றால் நானாவது உனக்கு விளக்கி இருக்க வேண்டாமா , நீயாக வரவேண்டும் என்று இவ்வளவு நாட்கள் விலகி இருந்ததும் எவ்வளவு தப்பு அல்லவா , அதற்கு நீதான் முதலில் என்னை மன்னிக்க வேண்டும் என்று அவளிடம் பதில் பேசியவன் , அதோடு இல்லாமல் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று வேற கூறி உன்னை அழவேறு வைத்து விட்டேன் , என்னை மன்னிப்பாயா கவி ப்ளீஸ் , என்று  பேச பேச , அப்பாடா ஒருவழியாக அனைத்து ப்ரொப்லெமும் ஒரு முடிவிற்கு வந்ததே என்று இருவருக்கும் சந்தோசமே அதிகமாகியது. அதோடு இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தனர்.

சரி நான் உன்னிடம் பேசவேண்டுமே இதைப்பற்றி என்று அவனருகில் இருந்த கட்டிலில் அவளை அமர்த்தியவன் , அவனது அணைப்பினிலே , அன்று நடந்தது என்னவென்றால் என்று தொடங்க ஆரம்பிக்க , வேண்டாம் கீர்த்தி உங்களை நான் முழுவதும் நம்புகிறேன் , ஸோ விளக்கம் கூட தேவையே  இல்லை என்று அதை  தடுக்க , அப்படி இல்லை கவி , இது என்னோட திருப்திக்காக நான் கூற நினைக்குறேன் ப்ளீஸ் என்று அவளை அமைதியாக்கி தன் விளக்கங்களை கொடுத்தான்.......................................




 
பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருக்கும்னு நம்புறேன்....திஸ் இஸ் மை FB பேஜ் , முடிஞ்சா லைக் அண்ட் ஷேர் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் போஸ்ட்ல கிளைமாக்ஸ்ல  மீட் பண்ணலாம் bye ......


Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI

No comments:

Post a Comment